Sunday, April 28, 2013

பாடுது பாடுது பாட்டு - ஆயுள் கைதி

பாடல்: பாடுது பாடுது பாட்டு
திரைப்படம்: ஆயுள் கைதி
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா
இசை: ஷங்கர் கணேஷ்

பாடுது பாடுது பாட்டு பொன் மலைச்சாரல் காற்று
பாடுது பாடுது பாட்டு பொன் மலைச்சாரல் காற்று
பூவொன்று பாடலைக்கேட்டு சில்லென பூத்தது நேற்று
மாலையில் மாமரச்சோலையில் இந்நேரம்

பாடுது பாடுது பாட்டு பொன் மலைச்சாரல் காற்று
பாடுது பாடுது பாட்டு பொன் மலைச்சாரல் காற்று
பூவொன்று பாடலைக்கேட்டு சில்லென பூத்தது நேற்று
மாலையில் மாமரச்சோலையில் இந்நேரம்
பாடுது பாடுது பாட்டு பொன் மலைச்சாரல் காற்று

மாதம் என்றும் வாரம் என்றும் நாட்கள் சென்றாலும்
காதல் என்னும் வேதம் சொல்லும் நெஞ்சம் எந்நாளும்
வண்ணச்சோலை நான் வெயில் காலம் வாட
ஆசை மேகம் நீ அன்புத்தூறல் போட
வெப்பம்தான் விடைகூறும் நேரம்தான்
அப்பப்பா அடங்காத தாகம்தான்
விரல் பட்டாலே போதும் வற்றாமல் பாயும்
குற்றால நீர்வீழ்ச்சி

பாடுது பாடுது பாட்டு பொன் மலைச்சாரல் காற்று
பூவொன்று பாடலைக்கேட்டு சில்லென பூத்தது நேற்று
மாலையில் மாமரச்சோலையில் இந்நேரம்
பாடுது பாடுது பாட்டு பொன் மலைச்சாரல் காற்று

கோயில் கொண்ட சிற்பம் உண்டு தேவன் கொண்டாட
சோலை கொண்ட புஷ்பம் உண்டு தென்றல் நின்றாட
முன்னும் பின்னும் நான் முத்தக்கோலம் போட
தத்தித் தத்தித்தான் தங்கத்தேரும் ஆட
நெஞ்சுக்குள் மறக்காது நேசங்கள்
கண்ணுக்குள் உயிர்க்காதல் பாசங்கள்
இனி பொன்னூஞ்சல் ஆட பூமாலை சூட
கல்யாண வைபோகம்

பாடுது பாடுது பாட்டு பொன் மலைச்சாரல் காற்று
பூவொன்று பாடலைக்கேட்டு சில்லென பூத்தது நேற்று
மாலையில் மாமரச்சோலையில் இந்நேரம்
பாடுது பாடுது பாட்டு பொன் மலைச்சாரல் காற்று

No comments: