Tuesday, April 30, 2013

வானம் தரையில் வந்து நின்றதே - உன்னுடன்

பாடல்: வானம் தரையில் வந்து நின்றதே
திரைப்படம்: உன்னுடன்
பாடியவர்: ஹரிஹரன்
இசை: தேவா

வானம் தரையில் வந்து நின்றதே
பூமி நிலவில் புகுந்துக் கொண்டதே
திசைகள் எல்லாம் திரும்பிக் கொண்டதே
தென்றல் பூக்களில் ஒளிந்துக் கொண்டதே

விழிகளை வீசிய இளைய கொடி
இந்த விபத்துக்கள் உன்னால் நேர்ந்ததடி
விழிகளை வீசிய இளைய கொடி
இந்த விபத்துக்கள் உன்னால் நேர்ந்ததடி
ஒரே முறை அடி ஒரே முறை
ஒரு பார்வை பார் உலகம் சுழலும் மறுபடி

வானம் தரையில் வந்து நின்றதே
பூமி நிலவில் புகுந்துக் கொண்டதே

இமைகளைக் கொண்டு இருதயம் தோண்டும்
கலைகளை உந்தன் இரு கண்களில் வைத்தாய்
உதடுகள் அசைவில் உயிரை உறிஞ்சும்
செப்படி வித்தை அடி எப்படி கற்றாய்
புருவங்களில் மலையே வளையுமடி
புன்னகையில் ஜீவன் தவிடுபொடி
பூக்களின் கனவே வா பூமியின் நிலவே வா
இனிக்கின்ற தீயே வா இன்னிசை நதியே வா

வானம் தரையில் வந்து நின்றதே
பூமி நிலவில் புகுந்துக் கொண்டதே

சித்திர இதழில் தீக்குச்சி கிழித்தாய்
என் ரத்தத்தில் எறிந்தாய் நான் மொத்தத்தில் எரிந்தேன்
பௌர்ணமி விழியால் வான்மழை பெய்தாய்
என் சாம்பலில் இருந்து நான் சட்டென்று முளைத்தேன்
பார்த்ததிலே பாதி இளைத்து விட்டேன்
கண்களிலே ஒன்று தொலைத்து விட்டேன்
சிறகுள்ள மலரே வா இமைக்கின்ற சிலையே வா
ஆனந்த கலையே வா என் ஆண்மையின் விலையே வா

வானம் தரையில் வந்து நின்றதே
ச...நி...த...நி...த...ம
பூமி நிலவில் புகுந்துக் கொண்டதே
க...ம...க...ம...க...க
திசைகள் எல்லாம் திரும்பிக் கொண்டதே
தென்றல் பூக்களில் ஒளிந்துக் கொண்டதே

விழிகளை வீசிய இளைய கொடி
இந்த விபத்துக்கள் உன்னால் நேர்ந்ததடி
விழிகளை வீசிய இளைய கொடி
இந்த விபத்துக்கள் உன்னால் நேர்ந்ததடி
ஒரே முறை அடி ஒரே முறை
ஒரு பார்வை பார் உலகம் சுழலும் மறுபடி

No comments: