Monday, April 15, 2013

தேவதையை மண்ணில் இன்று - ஜங்ஷன்

பாடல்: தேவதையை மண்ணில் இன்று
திரைப்படம்: ஜங்ஷன்
இசை: பரத்வாஜ்
பாடியவர்கள்: ஶ்ரீனிவாஸ் & ரேஷ்மி

தேவதையை மண்ணில் இன்று பார்த்தேன்
இமைக்காமல் பார்க்கிறேன்

மெய் சிலிர்த்து மெய் மறந்து போனேன்
மனம் ஏங்கித் தவிக்கிறேன்

அடி உந்தன் உடல் ஒரு புல்லாங்குழல்
அதில் சங்கீதம் நான் இசைப்பேன்

தேவதையை மண்ணில் இன்று பார்த்தேன்
இமைக்காமல் பார்க்கிறேன்

மெய் சிலிர்த்து மெய் மறந்து போனேன்
மனம் ஏங்கித் தவிக்கிறேன்

இன்னும் இங்கே வித்தை கோடி உண்டு
ஒத்துழைத்தால் இன்னும் இன்பம் உண்டு

சில்மிஷங்கள் செய்யும் நேரம் எல்லாம்
சின்னச்சின்ன சொர்க்கம் தோன்றுதிங்கே

என்னை வேரோடு உன் கையில் சாய்த்து
உந்தன் நெஞ்சோடு தாலாட்டுப்பாடு

கங்கை ஆறாக வேர்க்கின்ற தேகம்
இதில் மீன் போல நீ நீச்சல் போடு

ஓர் ஆயுள் இது தீர்ந்திடும் வரையில்
ரகசியம் அறிந்திடுவோம்

தேவதையை மண்ணில் இன்று பார்த்தேன்
இமைக்காமல் பார்க்கிறேன்

மெய் சிலிர்த்து மெய் மறந்து போனேன்
மனம் ஏங்கித் தவிக்கிறேன்

நீ கொடுக்கும் இன்பம் போதவில்லை
மேல் கொதிக்கும் வெப்பம் ஆறவில்லை

அதிசயங்கள் இதில் ஏதுமில்லை
ஆசையெல்லாம் என்றும் தீர்வதில்லை

என்னை கொல்லாமல் கொல்கின்ற பார்வை
நெஞ்சில் உண்டாச்சு ஆனந்த போதை

இது இப்போதும் எப்போதும் தேவை
இந்த துன்பங்கள் சந்தோஷப் பாதை

வா காமன் அவன் போர்க்களம் அதிலே
சுகமுடன் போரிடலாம்

தேவதையை மண்ணில் இன்று பார்த்தேன்
இமைக்காமல் பார்க்கிறேன்

மெய் சிலிர்த்து மெய் மறந்து போனேன்
மனம் ஏங்கித் தவிக்கிறேன்

அடி உந்தன் உடல் ஒரு புல்லாங்குழல்
அதில் சங்கீதம் நான் இசைப்பேன்

தேவதையை மண்ணில் இன்று பார்த்தேன்
இமைக்காமல் பார்க்கிறேன்

மெய் சிலிர்த்து மெய் மறந்து போனேன்
மனம் ஏங்கித் தவிக்கிறேன்









No comments: