பாடல்: பன்னீர்ப்பூவின் பார்வையில்
திரைப்படம்: ரெண்டும் ரெண்டும் அஞ்சு
இசை: கங்கை அமரன்
பாடியவர்: சித்ரா
பன்னீர்ப்பூவின் பார்வையில்
கண்ணீர் கோலம் தான்
தண்ணீர் வேண்டும் வேரினில்
வெந்நீர் வெள்ளம் தான்
நெஞ்சில் ஏதோ வேதனை
சொன்னால் தீராதோ
கண்ணீர் சிந்தும் காரணம்
சொல்லக்கூடாதோ
பன்னீர்ப்பூவின் பார்வையில்
கண்ணீர் கோலம் தான்
தண்ணீர் வேண்டும் வேரினில்
வெந்நீர் வெள்ளம் தான்
பூ முடித்தவன் கை பிடித்தவன்
வாழ்வோ கொஞ்ச காலம்
பெண் மயங்கினால் கண் கலங்கினால்
யார்தான் இவள் காவல்
இவள் கழுத்திலே ஒரு தாலி
இது நிலைக்குமோ எனும் கேள்வி
விடை தேடிப்பார்க்கவோ
பன்னீர்ப்பூவின் பார்வையில்
கண்ணீர் கோலம் தான்
தண்ணீர் வேண்டும் வேரினில்
வெந்நீர் வெள்ளம் தான்
ஏன் துடிக்கிறாள் ஏன் தவிக்கிறாள்
கேட்க ஓர் தெய்வம் இல்லை
நாள் முழுவதும் பெண் தொழுவது
கோயில் கொண்ட கல்லை
பலன் கொடுக்குமோ இவள் பூஜை
உயிர் பிழைக்குமோ இந்த வேளை
விடை தேடிப்பார்க்கவோ
பன்னீர்ப்பூவின் பார்வையில்
கண்ணீர் கோலம் தான்
தண்ணீர் வேண்டும் வேரினில்
வெந்நீர் வெள்ளம் தான்
நெஞ்சில் ஏதோ வேதனை
சொன்னால் தீராதோ
கண்ணீர் சிந்தும் காரணம்
சொல்லக்கூடாதோ
பன்னீர்ப்பூவின் பார்வையில்
கண்ணீர் கோலம் தான்
தண்ணீர் வேண்டும் வேரினில்
வெந்நீர் வெள்ளம் தான்
No comments:
Post a Comment