Friday, April 12, 2013

தலைவனை அழைக்குது - என் ஆசை மச்சான்

பாடல்: தலைவனை அழைக்குது
திரைப்படம்: என் ஆசை மச்சான்
இசை: தேவா
பாடியவர்: எஸ்.ஜானகி

தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்

தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்
எனை வாட்டும் பூமனம் இங்கு வாழ்த்துதே தினம்
தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்
எனை வாட்டும் பூமனம் இங்கு வாழ்த்துதே தினம்
தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்

மாலையிட்டு பூமுடித்து மஞ்சளிட்டு நான் குளித்து
மன்னவனை தேடித்தேடி நான் மயங்குகிறேன்
தேரில் வரும் போதும் சுகம் தென்றல் தரும் நாதம் சுகம்
தெய்வத்திற்கு நன்றி சொல்லி நான் வணங்குகிறேன்
மஞ்சளோடு குங்குமமும்
மன்னவனின் பூஜைக்கென்று நான் படைத்தேன்
உயிரிலே உறவிலே கலந்து வாழ்கிறேன்
நான் நினைத்துப்பார்க்கிறேன் உந்தன் நிழலில் சாய்கிறேன்

தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்
எனை வாட்டும் பூமனம் இங்கு வாழ்த்துதே தினம்
தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்

துள்ளிவிழும் அருவியைப்போல் உன்னுடைய பார்வை என்மேல்
பட்டவுடன் பறந்து வானில் சிறகடிப்பதென்ன
என்னருகில் நீ இருந்து உன் இரண்டு கண் மலர்ந்தால்
நெல்லின் மணிபோல எந்தன் நிழல் தெரிவதென்ன
பெண்ணிலவு உன்னை எண்ணி
வெண்ணிலைப்போல இங்கு தேய்வதென்ன
தலைவனே தழுவ வா தனிமை வாட்டுது
வா பருவன் ஏங்குது முள்ளில் படுத்து தூங்குது

தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்
எனை வாட்டும் பூமனம் இங்கு வாழ்த்துதே தினம்
தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்


No comments: