Saturday, April 27, 2013

பூமியே பூமியே - செங்கோட்டை

பாடல்: பூமியே பூமியே
திரைப்படம்: செங்கோட்டை
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
இசை: வித்யாசாகர்

பூமியே பூமியே பூமழை நான் தூவவா
வானமே வானமே என்னிடம் அதை கேட்பதா
உன் பதில் கீதமே மார்கழி மாதமே ஆகுமே
பூமியே பூமியே பூமழை நான் தூவவா

நான் தேடும் ராகம் நீ என இங்கே
தெரியாமல் நானும் வாழ்ந்தேனே
நாள்தோறும் உன்னை நான் இங்கு பார்த்தும்
புரியாமல் நானும் போனேனே
என் வழிப்பாதை முள் பாதை
என நாளும் வாடினேன்
உன் வழிச்சாலை மலர்ச்சோலை
என நானே மாற்றுவேன்
உதிக்கும் கிழக்கே எனக்கே நீதானே
உனக்கினி வாழ்வில் நிழல் நானே

பூமியே பூமியே பூமழை நான் தூவவா
வானமே வானமே என்னிடம் அதை கேட்பதா

யாரோடு சொந்தம் யாருடன் பந்தம்
பிறக்கின்ற போதே தீர்ப்பாகும்
என்னோடு நீயும் உன்னுடன் நானும்
இருக்கின்ற காலம் தேனாகும்
பூமரம் தாங்கும் அதன் வேர்போல்
நான் உன்னைத் தாங்குவேன்
சாமரம் வீசும் மலைக்காற்றாய்
உன் மார்பில் நீந்துவேன்
இளமை வசந்தம் இனிமேல் மலர்த்தூவும்
இதயத்தின் உள்ளே குயில் கூவும்

பூமியே பூமியே பூமழை நான் தூவவா
வானமே வானமே என்னிடம் அதை கேட்பதா
உன் பதில் கீதமே மார்கழி மாதமே ஆகுமே

பூமியே பூமியே பூமழை நான் தூவவா
வானமே வானமே என்னிடம் அதை கேட்பதா

No comments: