Saturday, April 20, 2013

சொல்ல வார்த்தைகள் இல்லை - மெர்க்குரி பூக்கள்

பாடல்: சொல்ல வார்த்தைகள் இல்லை
திரைப்படம்: மெர்க்குரி பூக்கள்
இசை: கார்த்திக் ராஜா
பாடியவ்ர்கள்: கார்த்திக் ராஜா & ஷ்ரேயா கோஷல்

சொல்ல வார்த்தைகள் இல்லை
சொல்லாமல் காதலும் இல்லை
ஆசை வந்து கயிறு கட்டி அழைக்கிறதே உயிரே

பேச ஞாபகம் இல்லை
பேசாமல் போகவும் இல்லை
என்ன செய்ய ஏது செய்ய உள்ளம் கிடந்து அலைகிறதே

கணவா கணவா என் ஆசை கணவா
சேர்ந்துக்கொண்டேன் இதயம் துடிக்கிறதே

கனவா கனவாணைது காதல் கனவா
கிள்ளிக்கொண்டேன் எனக்கும் வலிக்கிறதே

சொல்ல வார்த்தைகள் இல்லை
சொல்லாமல் காதலும் இல்லை
ஆசை வந்து கயிறு கட்டி அழைக்கிறதே உயிரே

உன்னை விலகும் ஒவ்வொரு நொடியும் உன்னை நெருங்குகிறேன்
உன்னை விரும்பும் அத்தனை கணமும் என்னில் ததும்புகிறேன்

உன்னை விலகும் ஒவ்வொரு நொடியும் உன்னை நெருங்குகிறேன்
உன்னை விரும்பும் அத்தனை கணமும் என்னில் ததும்புகிறேன்
நேசிக்கிறேன் உன்னை என்னை அறியாமலே
யோசிக்கிறேன் இதைத்தான் நானும் புரியாமலே
நெஞ்சோடு கலகம் தீராததா
அன்பான உலகம் கை சேருமா
கண்ணோரங்கள் கொல்ல புது மின்சாரங்கள் செல்ல
இன்னும் என்ன சொல்ல நான் என்னைத் தந்தேன் மெல்ல

சொல்ல வார்த்தைகள் இல்லை
சொல்லாமல் காதலும் இல்லை
ஆசை வந்து கயிறு கட்டி அழைக்கிறதே அடியே

கண்கள் திறந்து கண்ணிமை திறந்து கண்டு கலந்ததென்ன
என்னை மறந்து உன்னையும் மறந்து உயிர் கரைந்ததென்ன

உள்ளம் கடந்து உள்ளத்தைக் கடந்து வந்த உணர்வு என்ன
நெஞ்சை அளந்து நேசத்தை அளந்து நின்று நினைத்ததென்ன
கோடுகளை இணைத்தால் கோலம் உருவாகுமே
இணைத்திடவே நல்ல காலம் உருவாகுமே
விண்ணொடும் துருவம் சேர்ந்திடுமே
உன்னோடு இதயம் கலந்திடுமே
அன்பே அன்பே என்று உனைத்தாலாட்டும் நாள் என்று
ஆகாயமும் நின்று மலர் பூத்தூவுமே அன்று

யாரோ நெஞ்சுக்குள் வந்து ஒரு லட்சம் வயலின்களை
மெல்ல மெல்ல இசைப்பது போல் இருக்கிறதே அன்பே

கணவா கணவா என் ஆசை கணவா
சேர்ந்துக்கொண்டேன் இதயம் துடிக்கிறதே

யாரோ நெஞ்சுக்குள் வந்து ஒரு லட்சம் வயலின்களை
மெல்ல மெல்ல ராகத்தோடு இசைப்பது போல் இருக்கிறதே

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

(http://myspb.blogspot.in/2013/04/1364.html) மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... நல்லதொரு பாடல் வரிகளுக்கு நன்றி...

Anonymous said...

பாலுஜியின் வ்லைப்பூவை பிரியா தளத்தில் தொடர்பு கொடுத்தமைக்கு மிக்க நன்றி தனபால் சார். நானே இன்று தான் இவரின் வலைப்பூவில் நுழைந்தேன். ஆஹா.. ஆஹா அறிதான பாடல் வரிகள் ஒரு பொக்கிஷம் கிடைத்தது போல் உனர்ந்தேன் சார். பிரியாவிற்க்கு பா.நி.பா வலைப்பூவின் ரசிகர்கள் சார்பாக அவருக்கும் நன்றிகள் பல. தொடருட்டும் அவரின் பணி.

lyricsbypriya said...

திண்டுக்கல் தனபாலன் மற்றும் கோவை ரவி அவர்களுக்கும் நன்றி!

lyricsbypriya said...

Welcome to my blog! :)