Monday, April 29, 2013

அன்பே அன்பே - உள்ளம் கொள்ளை போகுதே

பாடல்: அன்பே அன்பே
திரைப்படம்: உள்ளம் கொள்ளை போகுதே
பாடியவர்: உன்னிகிருஷ்ணன்
இசை: கார்த்திக் ராஜா

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சுக்காற்றாய் நான் வந்தே
வெளியே சென்றேன் சரிதானே

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சுக்காற்றாய் நான் வந்தே
வெளியே சென்றேன் சரிதானே

காதல் ஒரு பரிட்சைதானே
எழுதிடவே நானும் வந்தேன்
இன்னொருவர் பேரில்தானே
தேர்வெழுதிச் சென்றேனே
ரயில் பயணம்தானே காதல்
நானும் அதில் பயணம் செய்தேன்
இறங்கச்சொல்லி காதல் கேட்க
நான் இறங்கிச் சென்றேனே

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சுக்காற்றாய் நான் வந்தே
வெளியே சென்றேன் சரிதானே

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சுக்காற்றாய் நான் வந்தே
வெளியே சென்றேன் சரிதானே

சிலுவை சுமந்தானே அவன்
இந்த காதலில் விழுந்திருந்தால்
சிலுவை வலியென்ற வார்த்தையை
வாய்வழி சொல்வானா
இதயம் ஒரு நாள் இரண்டாக உடையும்
அன்று வந்து பார் உன் பிம்பம் தெரியும்
கண்ணீரிலே கடல் செய்து வைத்தேன்
நீ வந்துதான் நீராடிப்போ

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சுக்காற்றாய் நான் வந்தே
வெளியே சென்றேன் சரிதானே

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சுக்காற்றாய் நான் வந்தே
வெளியே சென்றேன் சரிதானே

முள்ளாய் நீ வந்தால்
கண்களைத் திறந்து காத்திருப்பேன்
தீயாய் நீ வந்தால்
என்னையும் திரியாய் நான் தருவேன்
கொஞ்சம் கொஞ்சமாய் ஏன் என்னை கொன்றாய்
கருணைக்கொலைதான் செய்யாமல் சென்றாய்
மலர் மாலையாய் மாறிடவே நினைத்தேன்
மலர் வளையமாய் நான் மாறினேன்

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சுக்காற்றாய் நான் வந்தே
வெளியே சென்றேன் சரிதானே

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சுக்காற்றாய் நான் வந்தே
வெளியே சென்றேன் சரிதானே

காதல் ஒரு பரிட்சைதானே
எழுதிடவே நானும் வந்தேன்
இன்னொருவர் பேரில்தானே
தேர்வெழுதிச் சென்றேனே
ரயில் பயணம்தானே காதல்
நானும் அதில் பயணம் செய்தேன்
இறங்கச்சொல்லி காதல் கேட்க
நான் இறங்கிச் சென்றேனே

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சுக்காற்றாய் நான் வந்தே
வெளியே சென்றேன் சரிதானே

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சுக்காற்றாய் நான் வந்தே
வெளியே சென்றேன் சரிதானே

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான பாடல்...

வரிகளுக்கு நன்றி...

lyricsbypriya said...

நன்றி, திண்டுக்கல் தனபாலன்!