பாடல்: ஓராயிரம் வைரங்கள்
திரைப்படம்: மறுபிறவி
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் (ஹம்மிங்: எல்.ஆர்.ஈஸ்வரி)
இசை: டி.ஆர்.பாப்பா
ஓராயிரம் வைரங்கள் சேர்ந்த அழகு
நூறாயிரம் காலங்கள் வாழும் நிலவு
முன்னூறு கண் வேண்டும்
நானூறு கை வேண்டும்
தேவதையே நான் சுவைக்க
ஓராயிரம் வைரங்கள் சேர்ந்த அழகு
நூறாயிரம் காலங்கள் வாழும் நிலவு
ஏதென்ஸ் உள்ளங்கள் கவிஞர்கள் எண்ணங்கள்
உன்னாலே தானே உயிர்பெற நினைக்கும்
ஏதென்ஸ் உள்ளங்கள் கவிஞர்கள் எண்ணங்கள்
உன்னாலே தானே உயிர்பெற நினைக்கும்
மதுக்கிண்ணம் ஒன்று உடல் வண்ணம் கொண்டு
மயக்கத்திலே கண் அசைக்கும்
ஓராயிரம் வைரங்கள் சேர்ந்த அழகு
நூறாயிரம் காலங்கள் வாழும் நிலவு
ஓர் முத்தம் தந்தால் உயிர் போகும் என்றால்
போகட்டும் நான் முத்தம் தருவேன்
உனக்காக அன்று போர் செய்த மன்னர்
மோகத்தை நானும் அறிவேன்
ஓராயிரம் வைரங்கள் சேர்ந்த அழகு
நூறாயிரம் காலங்கள் வாழும் நிலவு
முன்னூறு கண் வேண்டும்
நானூறு கை வேண்டும்
தேவதையே நான் சுவைக்க
1 comment:
நல்ல வரிகள்... நன்றி...
Post a Comment