Sunday, December 18, 2011

aayiram piRaigaL - thookku mEdai

பாடல்: ஆயிரம் பிறைகள்
திரைப்படம்: தூக்கு மேடை
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: வாணி ஜெயராம்

ஆயிரம் பிறைகள் காணும் வரை
அலைகடல் ஓசை அடங்கும் வரை
தமிழே உனக்காக...நீ தனியே எனக்காக
காத்திருப்பேன் நான் காத்திருப்பேன்

ஆயிரம் பிறைகள் காணும் வரை
அலைகடல் ஓசை அடங்கும் வரை
தமிழே உனக்காக...நீ தனியே எனக்காக
காத்திருப்பேன் நான் காத்திருப்பேன்

கதிரவன் ஊர்வலம் நிற்கும் வரை
கனிவளம் உலகில் வற்றும் வரை
கதிரவன் ஊர்வலம் நிற்கும் வரை
கனிவளம் உலகில் வற்றும் வரை
பொதிகை தென்றல் தூங்கும் வரை
பொன்னி நதியாள் பொய்க்கும் வரை
பொதிகை தென்றல் தூங்கும் வரை
பொன்னி நதியாள் பொய்க்கும் வரை
தமிழே உனக்காக...நீ தனியே எனக்காக

ஆயிரம் பிறைகள் காணும் வரை
அலைகடல் ஓசை அடங்கும் வரை
தமிழே உனக்காக...நீ தனியே எனக்காக
காத்திருப்பேன் நான் காத்திருப்பேன்

இயற்கை வளங்கள் இருக்கும் வரை
இலக்கிய செல்வம் வாழும் வரை
இயற்கை வளங்கள் இருக்கும் வரை
இலக்கிய செல்வம் வாழும் வரை
இளமை அழகு தேயும் வரை
முதுமை உடலில் பாயும் வரை
இளமை அழகு தேயும் வரை
முதுமை உடலில் பாயும் வரை
தமிழே உனக்காக...நீ தனியே எனக்காக

ஆயிரம் பிறைகள் காணும் வரை
அலைகடல் ஓசை அடங்கும் வரை
தமிழே உனக்காக...நீ தனியே எனக்காக
காத்திருப்பேன் நான் காத்திருப்பேன்
காத்திருப்பேன் நான் காத்திருப்பேன்
காத்திருப்பேன் நான் காத்திருப்பேன்
 

No comments: