Friday, December 23, 2011

vanjikkodi poovaanadhu - inimai idhO idhO

பாடல்: வஞ்சிக்கொடி பூவானது
திரைப்படம்: இனிமை இதோ இதோ
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி

வஞ்சிக்கொடி பூவானது
யாரைக்கேட்டு ஆளானது
வஞ்சிக்கொடி பூவானது
யாரைக்கேட்டு ஆளானது
சோகம் வந்து தழுவும் இவளை
பேதை நெஞ்சில் தினமும் கவலை
வஞ்சிக்கொடி ஹா பூவானது
யாரைக்கேட்டு ஆளானது

தேவையை தீர்க்கவா நான் உனை நாடினேன்
பெண்மையின் காவலாய் ஆண் துணை நாடினேன்
கை கொடுத்தால் கண்ணகி நான் கை விரித்தால் மாதவி தான்
பூங்கொடிக்கு துணை இருந்தால் வேறு பக்கம் சாயாது
காவிரிக்கு அணை இருந்தால் வேறு திசை பாயாது
மேலாடை பூக்கள் கண்டால் காமக்கண்கள் தாளாது

வஞ்சிக்கொடி ஹா பூவானது
யாரைக்கேட்டு ஆளானது
சோகம் வந்து தழுவும் இவளை
பேதை நெஞ்சில் தினமும் கவலை
வஞ்சிக்கொடி பூவானது
யாரைக்கேட்டு ஆளானது

பாதையின்றி யாத்திரைகள் விடிந்த பின்னும் ராத்திரிகள்
கல்யாணம் இல்லாமல் கை சேர்க்க ஆள் உண்டு
பொன் தேகம் தீண்டாமல் பூச்சூட யார் உண்டு
தேன் உண்ண வண்டு வந்தால் கேள்வி கேட்கும் பூவின்று

வஞ்சிக்கொடி பூவானது
யாரைக்கேட்டு ஆளானது
சோகம் வந்து தழுவும் இவளை
பேதை நெஞ்சில் தினமும் கவலை
வஞ்சிக்கொடி பூவானது
யாரைக்கேட்டு ஆளானது

No comments: