Sunday, December 18, 2011

azhagiya poomagaL varugaiyil - oor kuruvi

பாடல்: அழகிய பூமகள் வருகையில்
திரைப்படம்: ஊர்க்குருவி
இசை: கங்கை அமரன்
பாடியவர்: எஸ்.ஜானகி

அழகிய பூமகள் வருகையில்
மலர்களை பொழியுது பூமரமே
பழகிய தேவதை விழிகளில்
ஆயிரம் கனவுகள் ஊர்வலமே
தோகை மயில் ஒரு தூது விடும்
தோள்களிலே இனி மாலை விழும்
ஆயிரம் ஆயிரம் பூ மலரும்
அழகிய பூமகள் வருகையில்
மலர்களை பொழியுது பூமரமே
பழகிய தேவதை விழிகளில்
ஆயிரம் கனவுகள் ஊர்வலமே

மார்கழி வேளையில்
மன்மதன் சோலையில்
மழைத்துளி விழுகிறதே
திருமண மாலையும்
அழகிய சேலையும்
கனவினில் வருகிறதே
பழைய கதை இனி மாறி விடும்
பருவ சுகம் இனி ஊறி வரும்
வளர்ந்து விரிந்து கொழுந்து எழுந்து
மலர்களைத் தழுவிடும் புதிய சுகம்

அழகிய பூமகள் வருகையில்
மலர்களை பொழியுது பூமரமே
பழகிய தேவதை விழிகளில்
ஆயிரம் கனவுகள் ஊர்வலமே

இனி ஒரு தடை இல்லை
வழியினில் அணை இல்லை
நதியினை நகர விடு
மங்கல வேளையில்
மன்மதன் சோலையில்
மலர்களை மலர விடு
புதிய கலை எனை எழுத விடு
மலர் அணையில் எனை மகிழ விடு
சிறந்த விருந்து அருந்து விரைந்து
இளமையின் அமுதங்கள் பருகி விடு

அழகிய பூமகள் வருகையில்
மலர்களை பொழியுது பூமரமே
பழகிய தேவதை விழிகளில்
ஆயிரம் கனவுகள் ஊர்வலமே
தோகை மயில் ஒரு தூது விடும்
தோள்களிலே இனி மாலை விழும்
ஆயிரம் ஆயிரம் பூ மலரும்
அழகிய பூமகள் வருகையில்
மலர்களை பொழியுது பூமரமே
பழகிய தேவதை விழிகளில்
ஆயிரம் கனவுகள் ஊர்வலமே
 

No comments: