Sunday, December 18, 2011

othai kiLai thanil - andhasthu

பாடல்: ஒத்தைக்கிளைதனில்
திரைப்படம்: அந்தஸ்து
இசை:
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

ஒத்தைக்கிளைதனில் ரெட்டைக்கனிகளும்
தொத்திக் கொண்டனவோ
தொத்திக்கொண்டதை முத்துப்பைங்கிளி
கொத்தித் தின்றிடுமோ
ஒட்டிக்கொள்ளவோ கொஞ்சம் எட்டிச்செல்லவோ
அருகே நான் வரலாமோ இனி அச்சம் என்னடியோ
அருகே நான் வரலாமோ இனி அச்சம் என்னடியோ

ஒத்தைக்கிளைதனில் ரெட்டைக்கனிகளும்
தொத்திக் கொண்டனவோ
தொத்திக்கொண்டதை முத்துப்பைங்கிளி
கொத்தித் தின்றிடுமோ
ஒட்டிக்கொள்ளவோ கொஞ்சம் எட்டிச்செல்லவோ
அருகே நான் வரலாமோ இனி அச்சம் என்னடியோ
அருகே நான் வரலாமோ இனி அச்சம் என்னடியோ

மோகம் என்ன மோகம் உனை பார்த்ததாலே
ஏழு வர்ண ஜாலம் விழி ஜாடை மேலே
தேகம் என்ன தேகம் எனை சேரும் போது
போதும் இன்று போதும் இடை தாங்கிடாது
இதிலென்ன கலக்கம் இதுதான் இளமையின் மயக்கம்
இதிலென்ன கலக்கம் இதுதான் இளமையின் மயக்கம்
மெதுவாக பதமாக நடை போடும் பூங்கொடி நான்

ஒத்தைக்கிளைதனில் ரெட்டைக்கனிகளும்
தொத்திக் கொண்டனவோ
தொத்திக்கொண்டதை முத்துப்பைங்கிளி
கொத்தித் தின்றிடுமோ
ஒட்டிக்கொள்ளவோ கொஞ்சம் எட்டிச்செல்லவோ
அருகே நான் வரலாமோ இனி அச்சம் என்னடியோ
அருகே நான் வரலாமோ இனி அச்சம் என்னடியோ

ஏடெடுத்து நானும் படிக்காத வேதம்
கையணைத்து நீயும் இசைக்கின்ற கீதம்
வானிருந்து மேகம் தரை சேரும் நேரம்
வாடுகின்ற தேகம் குளிர் காணக்கூடும்
இரவுகள் வரட்டும் இன்னும் உறவுகள் விளங்கும்
இரவுகள் வரட்டும் இன்னும் உறவுகள் விளங்கும்
மடி மீது விழ வேண்டும் இந்த தங்கத்தாமரையே

ஒத்தைக்கிளைதனில் ரெட்டைக்கனிகளும்
தொத்திக் கொண்டனவோ
தொத்திக்கொண்டதை முத்துப்பைங்கிளி
கொத்தித் தின்றிடுமோ
ஒட்டிக்கொள்ளவோ கொஞ்சம் எட்டிச்செல்லவோ
அருகே நான் வரலாமோ இனி அச்சம் என்னடியோ
அருகே நான் வரலாமோ இனி அச்சம் என்னடியோ
லல லாலா லல லலா லல லாலா லல் லல லா
லல லாலா லல லலா லல லாலா லல் லல லா

No comments: