Monday, December 19, 2011

kaadhal mandhirathil thandhirathil - nEram vandhaachu

பாடல்: காதல் மந்திரத்தில் தந்திரத்தில்
திரைப்படம்: நேரம் வந்தாச்சு
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: பி.ஜெயசந்திரன் & வாணி ஜெயராம்

காதல் மந்திரத்தில் தந்திரத்தில் கண் மயங்க
காணும் சுந்தரத்தில் அந்தரத்தில் பெண் மயங்க
செவ்வாயில் செந்தேனில் சர்க்கரை இனிக்க

காதல் மந்திரத்தில் தந்திரத்தில் கண் மயங்க
காணும் சுந்தரத்தில் அந்தரத்தில் பெண் மயங்க
வா வா வா ராதா பூந்தேன் தான் நீ தா

காதல் மந்திரத்தில் தந்திரத்தில் கண் மயங்க
காணும் சுந்தரத்தில் அந்தரத்தில் பெண் மயங்க
செவ்வாயில் செந்தேனில் சர்க்கரை இனிக்க

உள்ளங்கள் ஆனந்த பாடல்கள் பாட
எண்ணங்கள் ஆயிரம் தாளங்கள் போட
தேர் மீது நாளும் ஊர்கோலம் போகும்
ராஜாவும் ராஜாத்தி ஊடலை ரசிக்க

காதல் மந்திரத்தில் தந்திரத்தில் கண் மயங்க
காணும் சுந்தரத்தில் அந்தரத்தில் பெண் மயங்க
வா வா வா ராதா...வா வா வா ராஜா

பொன்னான வாலிப காலங்கள் வாழ்க
பொல்லாத லீலைகள் மாலையில் காண்க
மேலாடை சூடும் பாலாடை மேனி
மோகங்கள் கொண்டாடி மோஹனம் இசைக்க

உஷ்ணத்தை ஏற்றுது ஏற்றுது காற்று
உள்ளுக்குள் ஊறுது ஊறுது ஊற்று
தாளாமல் தேகம் தள்ளாடும் நேரம்
தாகங்கள் தீராமல் ஜோடிகள் தவிக்க

காதல் மந்திரத்தில் தந்திரத்தில் கண் மயங்க
காணும் சுந்தரத்தில் அந்தரத்தில் பெண் மயங்க
வா வா வா ராதா...வா வா வா ராஜா
வா வா வா ராதா...வா வா வா ராஜா

No comments: