Monday, December 19, 2011

enakkum unakkum vazhakku - thaai veettu seethanam

பாடல்: எனக்கும் உனக்கும் வழக்கு
திரைப்படம்: தாய் வீட்டு சீதனம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்

எனக்கும் உனக்கும் வழக்கு
எனக்கும் உனக்கும் வழக்கு
இரண்டும் சுகத்தின் கணக்கு
கையிணைத்து தொட்டணைத்து
நாம் கலந்தால் என்ன

எனக்கும் உனக்கும் வழக்கு
எனக்கும் உனக்கும் வழக்கு
இரண்டும் சுகத்தின் கணக்கு
கையிணைத்து தொட்டணைத்து
நாம் கலந்தால் என்ன

அல்லித்தண்டு கையிரண்டில் வளைகின்றது
அள்ளிக்கொள்ளும் சின்னமுல்லை குழைகின்றது
இல்லையென்று சொல்லாமல் அள்ளி அள்ளித்தந்தாலும்
இன்னும் இன்னும் பேராசை புரிகின்றது
சொன்னாலும் புரியாத சுகம் ஒன்றுண்டு
சுகமாக விளையாட இடம் ஒன்றுண்டு

எனக்கும் உனக்கும் வழக்கு
இரண்டும் சுகத்தின் கணக்கு
கையிணைத்து தொட்டணைத்து
நாம் கலந்தால் என்ன

உள்ளம் தன்னில் உள்ளம் ஒன்று ஒளிகின்றது
பள்ளம் கண்டு வெள்ளம் வந்து பாய்கின்றது
மண்ணில் இட்ட மீனாக கண்ணி பட்ட மானாக
ஒன்றுபட்டு போராட துடிக்கின்றது
சொன்னாலும் புரியாத சுகம் ஒன்றுண்டு
சுகமாக விளையாட இடம் ஒன்றுண்டு

எனக்கும் உனக்கும் வழக்கு
இரண்டும் சுகத்தின் கணக்கு
கையிணைத்து தொட்டணைத்து
நாம் கலந்தால் என்ன
ஹா ஹா ஹா
ஹோ ஹொ ஹோ ஹோ

No comments: