Sunday, December 18, 2011

nee ezhuthum kaditham - athipathi

பாடல்: நீ எழுதும் கடிதம்
திரைப்படம்: அதிபதி
இசை: சந்திரபோஸ்
பாடியவர்கள்: பி.ஜெயசந்திரன் & பெண் குரல்?

நீ எழுதும் கடிதம்
தேன் மலரின் அமுதம்
வா வா சுக மழைதனில் நனைவோம்
கண்ணால் கவிதை கோடி வரைவோம்

நான் எழுதும் கடிதம்
தேன் மலரின் அமுதம்
வா வா சுக மழைதனில் நனைவோம்
கண்ணால் கவிதை கோடி வரைவோம்

பூந்தென்றல் தேரேறி விளையாடுவோம்
பூக்கள் சூடியே உறவாடுவோம்
அமுதூறும் இதழோரம் சுவை தேடுவோம்
ஆசை ராகமே தினம் பாடுவோம்
இளங்காதல் அரங்கேறி சதிராடுவோம்
இனிப்பான கதை சொல்லி விழி மூடுவோம்

நீ எழுதும் கடிதம்
தேன் மலரின் அமுதம்

உன் பாசமடல் யாவும் உயர் காவியம்
உந்தன் அன்புதான் எழில் ஓவியம்
அழகான உன் பார்வை ரதி ஆலயம்
ஆடும் பாவை நீ புது நூலகம்
உனக்காக மலர்ந்தாடும் பூங்காவனம்
உன் கைகள் தர வேண்டும் ஆலிங்கனம்

நான் எழுதும் கடிதம்
தேன் மலரின் அமுதம்
வா வா சுக மழைதனில் நனைவோம்
கண்ணால் கவிதை கோடி வரைவோம்

நான் எழுதும் கடிதம்
தேன் மலரின் அமுதம்

No comments: