Saturday, August 25, 2012

தென்றலே மலர் சூடவா - ராஜா நீ வாழ்க

பாடல்: தென்றலே மலர் சூடவா
திரைப்படம்: ராஜா நீ வாழ்க
இசை: K.ரவி
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

தென்றலே மலர் சூடவா
கொடி மின்னலே வளை போடவா
மேகமே மழைத் துளிகளில்
மணிச் சதங்கைகள் கட்ட ஓடிவா

தென்றலே மலர் சூடவா
கொடி மின்னலே வளை போடவா
மேகமே மழைத் துளிகளில்
மணிச் சதங்கைகள் கட்ட ஓடிவா
தென்றலே மலர் சூடவா

நிலவே ஒரு மலரென மலர்வதும்
நிழலே மணி ஒலியென விரிவதும்
கனவா இல்லை நினைவா உன் முகமா
நிலவே ஒரு மலரென மலர்வதும்
நிழலே மணி ஒலியென விரிவதும்
கனவா இல்லை நினைவா உன் முகமா
காவியம் ஆயிரம் பாடுவதென் மனம்

பார்வையே மலர் சூடுமே
ஒளி புன்னகை வளை போடுமே
என் கண்களின் மழைத்துளிகளே
உன் கால்களில் ஜதி போடுமே
தென்றலே மலர் சூடவா

வீணை நாதஸ்வர மேள தாளமின்றி
வெண்ணிலா தினம் உதிப்பதில்லையா

வீணை நாதஸ்வர மேள தாளமின்றி
வெண்ணிலா தினம் உதிப்பதில்லையா
கனவு மலர கண் இமைகள் நெகிழ
புதுக்கனவு மலர கண் இமைகள் நெகிழ
ஒரு மழலை வடிவம் உன் மடியில் தவழ வரும்

வெண் புறா...
வெண் புறா விளையாட வா
குயில் பேடையே குழலூதி வா
அலைக்கரங்களில் நுரைக்குடங்களில்
நதி அன்னையே சீர் கொண்டு வா
தென்றலே மலர் சூடவா
கொடி மின்னலே வளை போடவா

லாலலா லல லாலலா
லல லாலலா லல லால லா
 
 

No comments: