Saturday, August 25, 2012

தென்றல் அடிக்குது - குங்குமக்கோடு

பாடல்: தென்றல் அடிக்குது
திரைப்படம்: குங்குமக்கோடு
இசை: எஸ்.ஏ.ராஜ்குமார்
பாடியர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா

ஹே முப்பது முக்கோடி தேவர்கள் சாட்சியா
சூரியன் சந்திரன் இந்திரன் சாட்சியா
பாடுற குயிலு ஆடுற மயிலு
பாடுற குயிலு ஆடுற மயிலு
காக்கா குருவி வானம் பூமி சாட்சியா ம்ம்ம்

தென்றல் அடிக்குது சிந்து பிறக்குது தேனே
ஷெண்பகப்பூவிழி என்னை அழைக்குது மானே
மலர் உன்னைத்தொடவா...ம்ஹூம்
மடியினில் விழவா...ம்ஹூம்
உனக்கென்ன மதனே...அடடா
எனக்கின்று மயக்கம் தயக்கம்
தென்றல் அடிக்குது சிந்து பிறக்குது தேனே
ஷெண்பகப்பூவிழி என்னை அழைக்குது மானே

அந்திவர பாத்து...பாத்து
மின்மினியும் பூக்கும்...பூக்கும்
ஒம் மொகத்தப் பாத்து...பாத்து
எம் மனசும் பூக்கும்...பூக்கும்
ஒன்னோடு ஒண்ணா சேர உள்ளம் ஏங்குது
மன்னாதி மன்னன் பேச்சு பொன்னத் தூவுது
தேனிருக்கும் பூமலர சூடிக்கொள்ளணும்
வானிருக்கும் நாள்வரைக்கும் வாழ்ந்திருக்கணும்

உறவுக்கு பிறந்தேன்...ம்ம்ஹ்ம்
கனவுக்குள் மலர்ந்தேன்...ம்ம்ஹ்ம்
நெலவுக்குள் வலர்ந்தேன்...அடடா
நெருக்கத்தில் மயங்க மயங்க

தென்றல் அடிக்குது சிந்து பிறக்குது தேனே
ஷெண்பகப்பூவிழி என்னை அழைக்குது மானே

கல்யாண மேளம்...மேளம்
காதலுக்கு வேணும்...வேணும்
எப்போது கேட்கும்...கேட்கும்
அத்திமரம் பூக்கும்...ம்ஹூம்
ஒன் வயசு பொண்ணுங்க எல்லாம் புள்ளைய பெத்தாச்சு
என் நெனப்பு ஒன்கிட்ட வச்சேன் என் கதை என்னாச்சு
சீர் எடுத்து பூமுடிக்க காலம் வந்துரும்
ஊர் முழுக்க பந்தலிட்டு தாலி கட்டணும்

தென்றல் அடிக்குது சிந்து பிறக்குது தேனே
ஷெண்பகப்பூவிழி என்னை அழைக்குது மானே
மலர் உன்னைத்தொடவா ம்ஹூம்
மடியினில் விழவா ம்ஹூம்
உனக்கென்ன மதனே அடடா
எனக்கின்று மயக்கம் தயக்கம்
தென்றல் அடிக்குது சிந்து பிறக்குது தேனே
ஷெண்பகப்பூவிழி என்னை அழைக்குது மானே
 

No comments: