Saturday, August 25, 2012

இரவினில் பனியினில் - நெருப்பிலே பூத்த மலர்

பாடல்: இரவினில் பனியினில்
திரைப்படம்: நெருப்பிலே பூத்த மலர்
இசை: K.V.மகாதேவன்
பாடியவர்கள்: பி.ஜெயசந்திரன் & வாணி ஜெயராம்

இரவினில் பனியினில்
இருவரும் விழித்திருப்போம்
ஒருவரின் மடியினில்
ஒருவரை அணைத்திருப்போம்
நமக்குள் இனி என்ன ரகசியமோ
உலகில் இது என்ன அதிசயமோ
நமக்குள் இனி என்ன ரகசியமோ
உலகில் இது என்ன அதிசயமோ


இரவினில் பனியினில்
இருவரும் விழித்திருப்போம்
ஒருவரின் மடியினில்
ஒருவரை அணைத்திருப்போம்
நமக்குள் இனி என்ன ரகசியமோ
உலகில் இது என்ன அதிசயமோ
நமக்குள் இனி என்ன ரகசியமோ
உலகில் இது என்ன அதிசயமோ


இலைகளின் மறைவினில்
கனி ஒன்று தெரிந்தால்
கிளிகள் விடுவதில்லை

இதயத்தின் நடுவினில்
ஒளி ஒன்று தெரிந்தால்
எண்ணம் விடுவதில்லை

ஆஆ...இலைகளின் மறைவினில்
கனி ஒன்று தெரிந்தால்
கிளிகள் விடுவதில்லை

இதயத்தின் நடுவினில்
ஒளி ஒன்று தெரிந்தால்
எண்ணம் விடுவதில்லை

இரண்டு பக்கம் மின்னிடும் காசு
என்ன வெட்கம் பேசடி பேசு
ம்ம்...இரண்டு பக்கம் மின்னிடும் காசு
என்ன வெட்கம் பேசடி பேசு
திரண்டு வரும் கவிதையை வீசு
உறவுக்கு வேலை கொடு
நல் உறவுக்கு வேலை கொடு


இரவினில் பனியினில்
இருவரும் விழித்திருப்போம்

ஒருவரின் மடியினில்
ஒருவரை அணைத்திருப்போம்

நமக்குள் இனி என்ன ரகசியமோ
உலகில் இது என்ன அதிசயமோ
நமக்குள் இனி என்ன ரகசியமோ
உலகில் இது என்ன அதிசயமோ

ரா ரா ர ரா ரா ர...ரா ரா
லா லா ல லா லா ல...லா லா

முடி தொட்டு அடி தொட்டு
பெருகிய கூந்தல்
முகத்தை மறைக்கட்டுமே

இடை தொட்டு உடை தொட்டு
ஜடை தொட்டுப் பார்த்து
பாடல் எழுதட்டுமே

முடி தொட்டு அடி தொட்டு
பெருகிய கூந்தல்
முகத்தை மறைக்கட்டுமே

இடை தொட்டு உடை தொட்டு
ஜடை தொட்டுப் பார்த்து
பாடல் எழுதட்டுமே

தாமரையின் விருந்துக்கு அழைப்பு
தாகம் உண்டு அருந்திட நினைப்பு
தாமரையின் விருந்துக்கு அழைப்பு
தாகம் உண்டு அருந்திட நினைப்பு

போதும் இங்கு பொங்குது துடிப்பு
திருமணம் ஆக்கட்டுமே

நமக்குள் திருமணம் ஆக்கட்டுமே

இரவினில் பனியினில்
இருவரும் விழித்திருப்போம்

ஒருவரின் மடியினில்
ஒருவரை அணைத்திருப்போம்

நமக்குள் இனி என்ன ரகசியமோ
உலகில் இது என்ன அதிசயமோ

நமக்குள் இனி என்ன ரகசியமோ
உலகில் இது என்ன அதிசயமோ


ல லா ல லா ல லா ல லா
லா லா ல ல ல ல லா

ல லா ல லா ல லா ல லா
லா லா ல ல ல ல லா

ல லா ல லா ல லா ல லா
லா லா ல ல ல ல லா

No comments: