பாடல்: பூவென்னும் கால்கள் ஓட
திரைப்படம்: சந்தன மலர்கள்
இசை: கங்கை அமரன்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகி
பூவென்னும் கால்கள் ஓட
போடாத தாளம் போட
நான் பாடுவேன் காதல் சுப்ரபாதம்
தூங்காத கண்களும் அதில்
தோன்றிடும் உன் வண்ணமும்
நீ பாடுகின்ற பாட்டைக்கேட்டு விழித்திடும்
பூவென்னும் கால்கள் ஓட
போடாத தாளம் போட
நான் பாடுவேன் காதல் சுப்ரபாதம்
பன்னீரைத்தூவும் மேகம்
பெண் நெஞ்சில் காதல் தாகம்
உன்னை வேண்டி வந்தது ஏன்
பதமான இதழின் ஓரம்
இதமான இனிய ஈரம்
சுகமான சுவைகள் ஊறும்
சுகங்கள் யாவும் தந்ததே
தினம் தினமும் தேடிடும்
இன்பமே என் மனம் வேண்டுமே
பூவென்னும் கால்கள் ஓட
போடாத தாளம் போட
நான் பாடுவேன் காதல் சுப்ரபாதம்
காலங்கள் போன போதும்
கை சேர்ந்து வாழ வேண்டும்
கண்ணே நீதான் என் துணை
கலையாத இன்ப நாதம்
கண் மீதில் நூறு பாவம்
கை சேரும் காலம் யாவும்
காண வேண்டும் மன்னனே
இணைந்திருப்போம் இன்று போல்
என்றுமே இன்பமே வேண்டுமே
பூவென்னும் கால்கள் ஓட
போடாத தாளம் போட
நான் பாடுவேன் காதல் சுப்ரபாதம்
நான் பாடுவேன் காதல் சுப்ரபாதம்
No comments:
Post a Comment