பாடல்: வண்ணக்காவியம் விண்ணில் பூத்திட
திரைப்படம்: பேசுவது கிளியா
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்: P.ஜெயசந்திரன்
வண்ணக்காவியம் விண்ணில் பூத்திட என்னைத் தேடியதோ
திங்கள் முகமும் பொங்கும் உணர்வும் கண்களில் ஆடியதோ
வண்ணக்காவியம் விண்ணில் பூத்திட என்னைத் தேடியதோ
திங்கள் முகமும் பொங்கும் உணர்வும் கண்களில் ஆடியதோ
தங்கத்தாமரையோ மனம் எங்கும் பூமழையோ
தங்கத்தாமரையோ மனம் எங்கும் பூமழையோ
வண்ணக்காவியம் விண்ணில் பூத்திட என்னைத் தேடியதோ
திங்கள் முகமும் பொங்கும் உணர்வும் கண்களில் ஆடியதோ
வாழ்வினில் இவள் வசந்தமே வந்த பின் என் சொந்தமே
தேரின் சிலையாக ஒரு காதல் கலையாக
வாழ்வினில் இவள் வசந்தமே வந்த பின் என் சொந்தமே
தேரின் சிலையாக ஒரு காதல் கலையாக
வந்ததோ கனவிலே இளம் தென்றலோ தொலைவிலே
வந்ததோ கனவிலே இளம் தென்றலோ தொலைவிலே
வண்ணக்காவியம் விண்ணில் பூத்திட என்னைத் தேடியதோ
திங்கள் முகமும் பொங்கும் உணர்வும் கண்களில் ஆடியதோ
பூமகள் இவள் அபிநயம் பொங்குதே இனிய சுரலயம்
காமன் கணையாக இரு கண்கள் வலைபோட
பூமகள் இவள் அபிநயம் பொங்குதே இனிய சுரலயம்
காமன் கணையாக இரு கண்கள் வலைபோட
வெண்ணிலா வந்ததே நான் பெண் நிலா என்றதே
வெண்ணிலா வந்ததே நான் பெண் நிலா என்றதே
வண்ணக்காவியம் விண்ணில் பூத்திட என்னைத் தேடியதோ
திங்கள் முகமும் பொங்கும் உணர்வும் கண்களில் ஆடியதோ
தங்கத்தாமரையோ மனம் எங்கும் பூமழையோ
தங்கத்தாமரையோ மனம் எங்கும் பூமழையோ
வண்ணக்காவியம் விண்ணில் பூத்திட என்னைத் தேடியதோ
திங்கள் முகமும் பொங்கும் உணர்வும் கண்களில் ஆடியதோ
No comments:
Post a Comment