Saturday, August 25, 2012

திருக்கோவில் சிற்பம் - தென்றல் தொடாத மலர்

பாடல்: திருக்கோவில் சிற்பம்
திரைப்படம்: தென்றல் தொடாத மலர்
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்

திருக்கோவில் சிற்பம் வந்தாள்
தேவாரப்பாடல் சொன்னாள்
ஒரு பார்வை என்னைப் பார்த்தாள்
விலை என்னைக் கேட்டாள்
திருக்கோவில் சிற்பம் வந்தாள்
தேவாரப்பாடல் சொன்னாள்
ஒரு பார்வை என்னைப் பார்த்தாள்
விலை என்னைக் கேட்டாள்
திருக்கோவில் சிற்பம் வந்தாள்

இன்னும் பிள்ளைத்தமிழ் சொல்லும்
பெண்மை எழில் மான் மான் இவளே
இன்னும் பிள்ளைத்தமிழ் சொல்லும்
பெண்மை எழில் மான் மான் இவளே
இவள் கண்ணில் நானூறு மின்னல்
நின்றாடும் காதல் தீபாவளி
சொந்தம் தந்தாள் நல்ல சந்தம் சொன்னாள்
இன்று சங்கீதம் நான் இசைக்க இங்கே

திருக்கோவில் சிற்பம் வந்தாள்
தேவாரப்பாடல் சொன்னாள்
ஒரு பார்வை என்னைப் பார்த்தாள்
விலை என்னைக் கேட்டாள்
திருக்கோவில் சிற்பம் வந்தாள்

நெஞ்சின் நிலா இவள் தென்றல்
தொடா மலர் தேன் தேன் தருவாள்
நெஞ்சின் நிலா இவள் தென்றல்
தொடா மலர் தேன் தேன் தருவாள்
இடை என்னைத் தாலாட்டும்
வண்ணத் தென்பாங்கு பாடும் நீலாம்பரி
முன்னும் பின்னும் விழி துள்ளும்
தத்தைக்கிளி தோளோடு நான் தழுவ இங்கே

திருக்கோவில் சிற்பம் வந்தாள்
தேவாரப்பாடல் சொன்னாள்
ஒரு பார்வை என்னைப் பார்த்தாள்
விலை என்னைக் கேட்டாள்
திருக்கோவில் சிற்பம் வந்தாள்

No comments: