Thursday, August 23, 2012

ஆரம்பமாகும் ஆனந்த ராகம் - புயல் கடந்த பூமி

பாடல்: ஆரம்பமாகும் ஆனந்த ராகம்
திரைப்படம்: புயல் கடந்த பூமி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: ராஜ்குமார் பாரதி & வாணி ஜெயராம்

ஆரம்பமாகும் ஆனந்த ராகம்
நாம் பாடலாம் மோஹனம்
ஆரம்பமாகும் ஆனந்த ராகம்
நாம் பாடலாம் மோஹனம்
பொன்மேக வானில் பூந்தென்றல் தேரில்
நாம் போகலாம் ஊர்வலம்
பொன்மேக வானில் பூந்தென்றல் தேரில்
நாம் போகலாம் ஊர்வலம்
நாம் போகலாம் ஊர்வலம்
ஆரம்பமாகும் ஆனந்த ராகம்
நாம் பாடலாம் மோஹனம்

நீலக்கண்ணில் ஊஞ்சல் ஆடும் இமையாகவா
நீலக்கண்ணில் ஊஞ்சல் ஆடும் இமையாகவா
என் ராதை நாவில் ஊறும் தேனில் சுவையாகவா
மழை நீயாகவா நிலம் நானாகவா
மழை நீயாகவா நிலம் நானாகவா
நான் நாள்தோறும் தோள் சேரும் கொடியாகவா
நான் நாள்தோறும் தோள் சேரும் கொடியாகவா

ஆரம்பமாகும் ஆனந்த ராகம்
நாம் பாடலாம் மோஹனம்

காமன் வந்து வேதம் சொல்ல நான் சேருவேன்
காமன் வந்து வேதம் சொல்ல நான் சேருவேன்
செந்தாழம்பூவில் தொட்டில்கட்டித் தாலாட்டுவேன்
இனி தாங்காதம்மா இமை தூங்காதம்மா
இனி தாங்காதம்மா இமை தூங்காதம்மா
நீ மேலாடை பாய்போட்டு பரிமாறம்மா
நீ மேலாடை பாய்போட்டு பரிமாறம்மா

ஆரம்பமாகும் ஆனந்த ராகம்
நாம் பாடலாம் மோஹனம்
பொன்மேக வானில் பூந்தென்றல் தேரில்
நாம் போகலாம் ஊர்வலம்
நாம் போகலாம் ஊர்வலம்
ஆரம்பமாகும் ஆனந்த ராகம்
நாம் பாடலாம் மோஹனம்

No comments: