Thursday, August 23, 2012

போதாது போதாது - பொறந்தாலும் ஆம்பளையா பொறக்கக்கூடாது

பாடல்: போதாது போதாது
திரைப்படம்: பொறந்தாலும் ஆம்பளையா பொறக்கக்கூடாது
இசை: பாலபாரதி
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & நிவேதா

போதாது போதாது வா இன்னும் பக்கத்திலே
போராடு போராடு ஆனந்த சொர்க்கத்திலே
தேனூறும் முத்தத்திலே உண்டாகும் சத்தத்திலே
தாளங்கள் போடு ராகங்கள் பாடு தாலாட்டும் சந்தத்திலே
போதாது போதாது வா இன்னும் பக்கத்திலே
போராடு போராடு ஆனந்த சொர்க்கத்திலே

வான் பார்க்கும் செவ்வாழைப்பூவென்ன பூவோ
இப்போதுதான் இங்கு நான் பார்க்கிறேன்
நீ பார்க்கும் உன் பார்வை என்னென்ன என்று
இப்போதுதான் இங்கு நான் கேட்கிறேன்
எங்கே சுகம்...அங்கே மனம்
சொல்லாமல் கொள்ளாமல் போகின்றது
தோளோடு தோள் வந்து சாய்கின்றது
உன் கண்களும் என் கண்களும்
பேசாமல் மௌனத்தில் பேசட்டும் இந்நேரம்

போதாது போதாது வா இன்னும் பக்கத்திலே
போராடு போராடு ஆனந்த சொர்க்கத்திலே

அங்கங்கள் எங்கெங்கும் பாய்கின்ற அம்பை
கண்ணா உன் கண்ணென்று யார் சொன்னது
சாமத்தில் காமத்தில் பூக்கின்ற பூவை
அம்மாடி பெண்ணென்று யார் சொன்னது
போதை தரும்...திராட்சை ரசம்
நீ ஊற்று என் தாகம் தீரும் வரை
நீர் ஊற்று என் வெப்பம் ஆறும் வரை
பால் வெண்ணிலா தீயானதா
தீ ஆற்றும் தேனாகும் நீ சிந்தும் முத்தங்கள்

போதாது போதாது வா இன்னும் பக்கத்திலே
போராடு போராடு ஆனந்த சொர்க்கத்திலே
தேனூறும் முத்தத்திலே உண்டாகும் சத்தத்திலே
தாளங்கள் போடு ராகங்கள் பாடு தாலாட்டும் சந்தத்திலே
போதாது போதாது வா இன்னும் பக்கத்திலே
போராடு போராடு ஆனந்த சொர்க்கத்திலே

No comments: