Thursday, August 23, 2012

வந்தாய் மழையாய் வந்தனம் - காட்டு ராஜா

பாடல்: வந்தாய் மழையாய் வந்தனம்
திரைப்படம்: காட்டு ராஜா
இசை: சக்ரவர்த்தி
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

ஆஆ ஆஆ ஆ வந்தாய் மழையாய் வந்தனம்
ஆஆ ஆஆ ஆ மனதை மலராய் தந்தனம்
நீயே மோகத்தின் மூலதனம்
பருவம் கண்டு நீ கொடுத்ததனம்
எங்களின் பருவத்து சீதனம்
இன்பம் கொடுக்கும் ஓர் சாதனம்
தேவர் உலகிலே வாழ்ந்திடும் அனுபவம்
லல் லால லால லல
ஆஆ ஆஆ ஆ வந்தாய் மழையாய் வந்தனம்
ஆஆ ஆஆ ஆ மனதை மலராய் தந்தனம்

இளமை என்னும் நந்தவனம்
இரவினில் பூக்க வந்த தனம்
காற்றும் மேகமும் கலந்த மாதிரி
கூடிட வேண்டும் வாலிபம்
நெருங்க நெருங்கவோ காதல் ரசம்
நெஞ்சுக்குள் இன்ப நினைவு தரும்
வாடைக்காற்று வாட்டுது என்னை
சூடா உன்னை வளைச்சிக்கணும்
மின்னலை நெஞ்சில் நான் கண்டேன்
இடிகளின் ஓசையை கேட்கின்றேன்
மேகம் என்னும் தேரிலே
வான தேவனின் வழிப்பயணம்
வான தேவனின் வழிப்பயணம்

ஆஆ ஆஆ ஆ வந்தாய் மழையாய் வந்தனம்
ஆஆ ஆஆ ஆ மனதை மலராய் தந்தனம்

அடடா உந்தன் கள்ளத்தனம்
அளப்பதற்கன்றோ கன்னி மனம்
காதல் தீயிலே வேகும் போதிலே
அணைத்திட பூமழை ஆடைதொடும்
முத்தத்தில் உனது தேன் வதனம்
பூத்தது அதிலே தான் உலகம்
தேவ தேவதை கூந்தல் பாயிலே
நித்திரை கொள்வது என்ன சுகம்
சிறு சிறு மழைத்துளி உள்ளோட
குலுங்கும் உன் உடல் தள்ளாட
காதலன் கைகளில் அர்ப்பணம்
காதலன் கைகளில் அர்ப்பணம்
காதலன் கைகளில் அர்ப்பணம்

ஆஆ ஆஆ ஆ வந்தாய் மழையாய் வந்தனம்
ஆஆ ஆஆ ஆ மனதை மலராய் தந்தனம்
நீயே மோகத்தின் மூலதனம்
பருவம் கண்டு நீ கொடுத்ததனம்
எங்களின் பருவத்து சீதனம்
இன்பம் கொடுக்கும் ஓர் சாதனம்
தேவர் உலகிலே வாழ்ந்திடும் அனுபவம்
லல ல லல லல
ஆஆ ஆஆ ஆ வந்தாய் மழையாய் வந்தனம்
ஆஆ ஆஆ ஆ மனதை மலராய் தந்தனம்

No comments: