Thursday, August 23, 2012

ஆசைகள் தேய்ந்ததே - கல்லுக்குள் தேரை

பாடல்: ஆசைகள் தேய்ந்ததே
திரைப்படம்: கல்லுக்குள் தேரை
இசை: ஷ்யாம்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

ஆசைகள் தேய்ந்ததே
பூஞ்சோலையும் முள்ளானதே
நதியில் ஓடமும் சாய்ந்ததே
நனைந்ததே கண்களே

ஆசைகள் தேய்ந்ததே
பூஞ்சோலையும் முள்ளானதே
நதியில் ஓடமும் சாய்ந்ததே
நனைந்ததே கண்களே

காலம் என்னும் வனவேடன்
வீசும் அம்பை யார் தாங்குவார்
காலம் என்னும் வனவேடன்
வீசும் அம்பை யார் தாங்குவார்
பழி யாவுமே என் மீதிலே
வழி இல்லையே இதை மாற்றவே
ஏங்கும் நெஞ்சை யார் தேற்றுவார்

ஆசைகள் தேய்ந்ததே
பூஞ்சோலையும் முள்ளானதே
நதியில் ஓடமும் சாய்ந்ததே
நனைந்ததே கண்களே

வீணை ஒன்று மண்மேலே
வீழ்ந்தே சோக பண்பாடுதே
வீணை ஒன்று மண்மேலே
வீழ்ந்தே சோக பண்பாடுதே
என் பாதையோ வெகு தூரமே
என் வாழ்க்கையோ சில காலமே
கானல் நீராய் கதையானதே

ஆசைகள் தேய்ந்ததே
பூஞ்சோலையும் முள்ளானதே
நதியில் ஓடமும் சாய்ந்ததே
நனைந்ததே கண்களே

ஆசைகள் தேய்ந்ததே
ஆசைகள் தேய்ந்ததே

No comments: