பாடல்: வான் வெளியில் நீ மலர
திரைப்படம்: ராஜா நீ வாழ்க
இசை: K.ரவி
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
வான் வெளியில் நீ மலர
என் நினைவில் தீ வளர
தென்றல் பிறந்தொரு தேகம் எடுத்தது
தேவதையோ சொல் வெண்ணிலவோ
வான் வெளியில் நீ மலர
என் நினைவில் தீ வளர
மின்னல் பிறந்தொரு மேனி எடுத்தது
மன்னவனோ சொல் வெண்ணிலவே
இன்றென் கைகளிலே பூமாலை ஆகிவிடு
என்றும் உன்னோடுதான் இப்போது மெல்லத்தொடு
கண்ணன் எந்தன் சன்னதிக்கு கன்னி வடிவில்
ஒரு புல்லாங்குழல் வந்ததோ
ராதை இங்கு கண் சிவக்க ராகம் நூறு நீ படிக்க
ராதை இங்கு கண் சிவக்க ராகம் நூறு நீ படிக்க
ராஜா உன் விளையாடலோ
வான் வெளியில் நீ மலர
என் நினைவில் தீ வளர
மின்னல் பிறந்தொரு மேனி எடுத்தது
மன்னவனோ சொல் வெண்ணிலவே
ஹே நீ தேன் கொண்டு வா என்னாசை தீராதது
நாணம் வெட்கம் என என்னுள்ளம் போராடுது
ஹே நீ தேன் கொண்டு வா என்னாசை தீராதது
நாணம் வெட்கம் என என்னுள்ளம் போராடுது
கைவளை நழுவுது கால் தடுமாறுது
கட்டுப்படலாகாது பாப்பா ஹா
மைவிழி சொறுகுது மந்திரம் போடுது
என் மனக் கதவுக்கு தாப்பா
அடி பூட்டையும் உடைப்பேன்
கோட்டையும் புடிப்பேன்
புலிக்குப் பிறந்தவன் நானடி
பூட்டையும் உடைப்பேன்
கோட்டையும் புடிப்பேன்
புலிக்குப் பிறந்தவன் நானடி
பாட்டுக்கு மட்டும் பாவனை செய்தேன்
பாக்கி வேலையை நீ முடி
வான் வெளியில் நீ மலர
என் நினைவில் தீ வளர
தென்றல் பிறந்தொரு தேகம் எடுத்தது
தேவதையோ சொல் வெண்ணிலவே
No comments:
Post a Comment