Saturday, August 25, 2012

தாலாட்டும் நிலவுக்கு - குங்குமக்கோடு

பாடல்: தாலாட்டும் நிலவுக்கு
திரைப்படம்: குங்குமக்கோடு
இசை: எஸ்.ஏ.ராஜ்குமார்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

தாலாட்டும் நிலவுக்கு காவலாய் வானம் இருக்குது
தள்ளாடும் மலருக்கு காவலாய் தென்றல் இருக்குது
பெண்ணே உனக்கு காவலாய் என்ன இருக்குது
பெண்ணே உனக்கு காவலாய் என்ன இருக்குது
தாலாட்டும் நிலவுக்கு காவலாய் வானம் இருக்குது
தள்ளாடும் மலருக்கு காவலாய் தென்றல் இருக்குது

பொட்டும் இல்ல பூவும் இல்ல குத்தம் யாருது
பொட்டும் இல்ல பூவும் இல்ல குத்தம் யாருது
பச்ச மரம் பட்டுவிட்டா பாவம் யாருது
புயல் வீசும் ஒரு நேரம் மழை தூவும் மறு நேரம்
இது காலம் செய்யும் வாதம் துயர்கோலம் என்று மாறும்
பாறையில போட்ட விதை பயிறாகும் நாளும் எது

தாலாட்டும் நிலவுக்கு காவலாய் வானம் இருக்குது
தள்ளாடும் மலருக்கு காவலாய் தென்றல் இருக்குது

கேள்வியில குத்தம் இல்ல மௌனம் ஏனம்மா
கேள்வியில குத்தம் இல்ல மௌனம் ஏனம்மா
காவல் தரும் நெஞ்சுக்குள்ள கள்ளம் ஏதம்மா
கண்ணோரம் என்ன சோகம் பெண் சாபம் என்று தீரும்
கொடிபூவில் இன்னும் வாசம் கொடுமைதானே வெள்ளைக்கோலம்
ஒரு பிள்ளைக்கென வாழ்ந்துவிட்டால் தெய்வங்கள் வாழ்த்து சொல்லும்

தாலாட்டும் நிலவுக்கு காவலாய் வானம் இருக்குது
தள்ளாடும் மலருக்கு காவலாய் தென்றல் இருக்குது
பெண்ணே உனக்கு காவலாய் என்ன இருக்குது
பெண்ணே உனக்கு காவலாய் என்ன இருக்குது
தாலாட்டும் நிலவுக்கு காவலாய் வானம் இருக்குது
தள்ளாடும் மலருக்கு காவலாய் தென்றல் இருக்குது
 

No comments: