Thursday, August 23, 2012

எழுதாத கவிதை - தசரதனுக்கு ஒன்பது பெண்கள்

பாடல்: எழுதாத கவிதை
திரைப்படம்: தசரதனுக்கு ஒன்பது பெண்கள்
இசை: முரளிதர்
பாடியவர்: எஸ்.ஜானகி

எழுதாத கவிதை என் சோக ராகம்
எழுதாத கவிதை என் சோக ராகம்
எதிர்காலம் கேட்கும் உயிருள்ள தீபம்
எதிர்காலம் கேட்கும் உயிருள்ள தீபம்
எழுதாத கவிதை என் சோக ராகம்

துணை தேடித்தேடி மனம் நொந்து வாடி
தடுமாறும் நெஞ்சமோ
மணவாழ்க்கை காண மலர் மாலையோடு
எதிர்பார்க்கும் மஞ்சமோ
துணை தேடித்தேடி மனம் நொந்து வாடி
தடுமாறும் நெஞ்சமோ
மணவாழ்க்கை காண மலர் மாலையோடு
எதிர்பார்க்கும் மஞ்சமோ
விதி சொன்ன ராகமோ
இளம்பெண்ணின் பாடலோ
நிலா...உலா...வரும்...தினம் ம்ம் ம்ம்

எழுதாத கவிதை என் சோக ராகம்

சிலர் வாழ வாழ பலர் வாட வாட
யாருக்கு யார் சொந்தமோ
சிலையான தெய்வம் உயிரோடு வந்து
வழி காட்டிச்செல்லுமோ
சிலர் வாழ வாழ பலர் வாட வாட
யாருக்கு யார் சொந்தமோ
சிலையான தெய்வம் உயிரோடு வந்து
வழி காட்டிச்செல்லுமோ
விதி சொன்ன ராகமோ
இளம்பெண்ணின் பாடலோ
நிலா...உலா...வரும்...தினம் ம்ம் ம்ம்

எழுதாத கவிதை என் சோக ராகம்
எதிர்காலம் கேட்கும் உயிருள்ள தீபம்
எதிர்காலம் கேட்கும் உயிருள்ள தீபம்
எழுதாத கவிதை என் சோக ராகம்

1 comment: