Tuesday, January 3, 2012

azhagiya malarkkodi - iNaindha kOdugaL

பாடல்: அழகிய மலர்க்கொடி
திரைப்படம்: இணைந்த கோடுகள்
இசை: G.K.வெங்கடேஷ்
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & வாணி ஜெயராம்

அழகிய மலர்க்கொடி பழகிய மணிக்கிளி
அழகிய மலர்க்கொடி பழகிய மணிக்கிளி
ஆனந்த நீராடவா உன்னோடு ஆனந்த நீராடவா

எனக்கென பிறந்தவன் இளம்தமிழ் கலைமகன்
ஆனந்த நீராடலாம் என்னோடு ஆனந்த நீராடலாம்

செந்தூரப் பொட்டு போலே
தென்பாங்கு மெட்டு போலே
தேராக நான் ஆடவா
முந்தானை காற்றில்
முன்னூறு பாட்டு பாட
முத்தாரம் நான் சூடவா

செந்தூரப் பொட்டு போலே
தென்பாங்கு மெட்டு போலே
தேராக நான் ஆடவா
முந்தானை காற்றில்
முன்னூறு பாட்டு பாட
முத்தாரம் நான் சூடவா

தவிக்குது மனம் இரண்டு
அழைக்குது விழி உருண்டு
கொதிக்குது உடல் இரண்டு
மயங்குது மனம் திரண்டு
பூங்காற்றாக தேனூற்றாக நீ ஓடிவா

எனக்கென பிறந்தவன் இளம்தமிழ் கலைமகன்
ஆனந்த நீராடலாம் என்னோடு ஆனந்த நீராடலாம்

பொன்னாட்டம் உன்னை அள்ளி
பூவாட்டம் முல்லை கிள்ளி
பந்தாட்டம் நான் ஆடவா
வண்டாட்டம் நீயும் மாற
செண்டாட்டம் நானும் மாற
கொண்டாட்டம் நீ போடலாம்

பொன்னாட்டம் உன்னை அள்ளி
பூவாட்டம் முல்லை கிள்ளி
பந்தாட்டம் நான் ஆடவா
வண்டாட்டம் நீயும் மாற
செண்டாட்டம் நானும் மாற
கொண்டாட்டம் நீ போடலாம்

இனிக்கிற தினம் வரைக்கும்
சுகங்களை அனுபவிக்கும்
இதயங்கள் சிறகடிக்கும்
உறவினில் மனம் சிலிர்க்கும்
மேகம் நீயே தோகை நானே பண் பாடவா

அழகிய மலர்க்கொடி பழகிய மணிக்கிளி
ஆனந்த நீராடவா உன்னோடு ஆனந்த நீராடவா

No comments: