Friday, January 27, 2012

உந்தன் வார்த்தையில் - பேசு

பாடல்: உந்தன் வார்த்தையில்
திரைப்படம்: பேசு
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: கிருஷ் & ராஜலக்ஷ்மி

உந்தன் வார்த்தையில் எந்தன் கவிதைகள்
என்ன காரணம்...ஓ ஓ ஓ ஹோ
உந்தன் கண்களில் எந்தன் பார்வைகள்
என்ன காரணம்...ஓ ஓ ஓ ஹோ
ஒரு பட்டாம்பூச்சி கூட்டம்
என்னை என்னை மெல்ல மிரட்டுதே மிரட்டுதே
ஒரு சுராவளிக்காற்று வந்து வந்து குடை பிடிக்குதே
ஓ...ஓ...ஓ...ஓ ஹோ இதுதானோ காதல் கலவரம்
ஓ...ஓ...ஓ...ஓ ஹோ உனக்குள்ளே என்ன நிலவரம்
ஓ...ஓ...ஓ...ஓ ஹோ

ஓடை மீன் போலே நீந்துதே ஆசை
ஆசையை சொல்லத்தானே பாஷை இல்லையே
ஆசையை சொல்லும் பாஷைகள் இருந்தும்
ஓசைகள் மட்டும் ஏனோ மௌனம் ஆனதே
அருகினில் இருந்தும் நான் உன்னை அனுகவே இல்லை
தொலைவினில் இருந்தும் நீ என்னைத் தொடர்வதே தொல்லை
பூமிக்கு வெளியே போகின்ற வழியை
காதல்தான் இப்பொழுது திறக்கிறதே

பகலெல்லாம் கனவு கனவெல்லாம் நிலவு
நிலவெல்லாம் உன் நிழல்தான் தெரிகிறதே
தலைமேலே பூமி தரைபோலே வானம்
காற்றெல்லாம் வர்ணமாக ஜொளிக்கிறதே
புதுவித அலைகள் கண்முன்னே சுழலுதே மெதுவாய்
பொய்களும் கூட இப்போதான் பிடிக்குதே பொதுவாய்
காதலின் கணக்கு கண்ணுக்குள் இருக்கு
விடைதேடி தானே காதல் விரைகிறதே

உந்தன் வார்த்தையில் எந்தன் கவிதைகள்
என்ன காரணம்...ஓ ஓ ஓ ஹோ
உந்தன் கண்களில் எந்தன் பார்வைகள்
என்ன காரணம்...ஓ ஓ ஓ ஹோ
ஒரு பட்டாம்பூச்சி கூட்டம்
என்னை என்னை மெல்ல மிரட்டுதே மிரட்டுதே
ஒரு சுராவளிக்காற்று வந்து வந்து குடை பிடிக்குதே
ஓ...ஓ...ஓ...ஓ ஹோ இதுதானோ காதல் கலவரம்
ஓ...ஓ...ஓ...ஓ ஹோ உனக்குள்ளே என்ன நிலவரம்
ஓ...ஓ...ஓ...ஓ ஹோ

No comments: