Friday, January 27, 2012

அடி ஆத்தாடி - கடலோரக் கவிதைகள்

பாடல்: அடி ஆத்தாடி
திரைப்படம்: கடலோரக் கவிதைகள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா & எஸ்.ஜானகி

அடி ஆத்தாடி...

அடி ஆத்தாடி இளம் மனசொண்ணு
ரெக்கை கட்டி பறக்குது சரிதானா
அடி அம்மாடி ஒரு அலை வந்து
மனசுல அடிக்குது அதுதானா
உயிரோடு உறவாடும்
ஒரு கோடி ஆனந்தம்
இவன் மேகம் ஆக யாரோ காரணம்
ஆஆ...ஆஆ...ஆஆ...ஆஆ
அடி ஆத்தாடி இள மனசொண்ணு
ரெக்கை கட்டி பறக்குது சரிதானா
அடி அம்மாடி...

மேல போகும் மேகம் எல்லாம்
கட்டுப்பட்டு ஆடாதோ
உன்னைப்பார்த்து அலைகள் எல்லாம்
மெட்டுக்கட்டி பாடாதோ
இப்படி நான் ஆனதில்ல
புத்தி மாறிப் போனதில்ல
முன்னப்பின்ன நேர்ந்ததில்ல
மூக்கு நுனி வேர்த்ததில்ல
கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள
கத்திச்சண்டை கண்டாயோ
படபடக்கும் நெஞ்சுக்குள்ள
பட்டாம்பூச்சி பார்த்தாயோ
இசை கேட்டாயோ...ஓஓ ஓ ஓஓஓ

லல லல லா லல லல லல லல லா
லல லல லா லல லல லா
லல லல லா லல லல லல லல லா

தாகப்பட்ட நெஞ்சுக்குள்ளே
ஏகப்பட்ட சந்தோஷம்
உண்மை சொல்லு பொண்ணே
என்னை என்ன செய்ய உத்தேசம்
வார்த்தை ஒண்ணு வாய் வரைக்கும்
வந்து வந்து போவதென்ன
கட்டுமரம் பூ பூக்க
ஆசைப்பட்டு ஆவதென்ன
கட்டுத்தறி காளை நானே
கன்னுக்குட்டி ஆனேனே
தொட்டுத்தொட்டு தென்றல் பேச
தூக்கம் கெட்டுப்போனேனே
சொல் பொன்மானே...ஏஏ ஏ ஏஏஏ

அடி ஆத்தாடி இளம் மனசொண்ணு
ரெக்கை கட்டி பறக்குது சரிதானா
அடி அம்மாடி ஒரு அலை வந்து
மனசுல அடிக்குது அதுதானா
உயிரோடு உறவாடும்
ஒரு கோடி ஆனந்தம்
இவன் மேகம் ஆக யாரோ காரணம்
ஆஆ...ஆஆ...ஆஆ...ஆஆ
அடி ஆத்தாடி இள மனசொண்ணு
ரெக்கை கட்டி பறக்குது சரிதானா
அடி ஆத்தாடி...

No comments: