Friday, January 27, 2012

யாரந்த பெண் அவளோ - சகாக்கள்

பாடல்: யாரந்த பெண் அவளோ
திரைப்படம்: சகாக்கள்
இசை: Sri.M.அழகப்பன் தயாரத்னம்
பாடியவர்: ஶ்ரீனிவாஸ்

யாரந்த பெண் அவளோ
ஊரென்ன பேரும் என்ன

யாரந்த பெண் அவளோ தெரியதே
ஊரென்ன பேரும் என்ன அறியேனே
யாரந்த பெண் அவளோ தெரியதே
ஊரென்ன பேரும் என்ன அறியேனே
மல்லிகையைப்போல மெல்ல சிரிப்பா
மெல்லிசையா பேசி நெஞ்சை பறிப்பா
கொஞ்சி கலப்பா

யாரந்த பெண் அவளோ தெரியதே
ஊரென்ன பேரும் என்ன அறியேனே

செக்க சிவந்த நிலவே
நீ இருந்தால் உச்சி வெயிலும் குளிரே
பக்கம் இருக்க வாடி
எனக்கு ஒரு சொர்க்கம் கிடைக்கும் தோழி
உலகம் நமக்கு பறந்து கிடக்கு
உனக்கும் எனக்கும் தனிமை எதுக்கு
உன் பார்வை எப்பொழுதும் என் காதல் புத்தகமே
பக்கங்கள் இருக்காது
உன் பேச்சு சலிக்காது உன் பேச்சு சலிக்காது

தெரியாதே...அறியேனே...

மெத்தை மடியில் படுத்து
உனக்கு ஒரு குட்டிக்கதையும் சொல்லவா
தத்தோம் திகிட தகதோம்
உனது விழி தாளம் போடும் அள்ளவா
தெறிச்ச விதையா நிலத்தில் விழுந்தேன்
எனக்கு மழையா எப்போது வருவாயோ
நீ என்னை திட்டுவதும் நான் வந்து ஒட்டுவதும்
எல்லைக்குள் இருக்காது
என் ஆசை குறையாது என் ஆசை குறையாது

தெரியாதே...அறியேனே
யாரந்த பெண் அவளோ தெரியதே
ஊரென்ன பேரும் என்ன அறியேனே
மல்லிகையைப்போல மெல்ல சிரிப்பா
மெல்லிசையா பேசி நெஞ்சை பறிப்பா
கொஞ்சி கலப்பா
யாரந்த பெண் அவளோ தெரியதே
ஊரென்ன பேரும் என்ன அறியேனே

2 comments:

Anonymous said...

பாடல் வரிகளுக்கு நன்றி பிரியா. எப்படி இருக்கீங்க ?

lyricsbypriya said...

நன்றி! நீங்க எப்படி இருக்கீங்க?