Friday, January 27, 2012

மழையுதிர் காலம் - எத்தன்

பாடல்: மழையுதிர் காலம்
திரைப்படம்: எத்தன்
இசை: தாஜ்நூர்
பாடியவர்கள்: விஜய் யேசுதாஸ் & சைந்தவி

மழையுதிர் காலம் மழையுதிர் காலம் நெஞ்சில் தெரிகிறதே
மனசுக்குள் ஏதோ மனசுக்குள் ஏதோ மின்னல் அடிக்கிறதே
பனியின் துளிகள் விழும்போது இலைகள் அறியாதே
உன் முகம் பார்த்து உன்னுடன் நடந்தால் தூரம் குறைகிறதே
வார்த்தை சொல்ல துடிப்பதை உன் பார்வை சொல்கிறதே
மௌனம் போலவே ஒரு மொழிதான் ஏதடி
மழையுதிர் காலம் மழையுதிர் காலம் நெஞ்சில் தெரிகிறதே

எத்தனையோ பயணங்கள் வந்தது போனது
இதுபோல் பயணமில்லை
என்னை விட்டுத்தள்ளி நின்று என்னை நானே பார்க்கிறேன்
பரவசம் குறையவில்லை
கத்திமேல் நடக்கும் மாயம் இந்த காதலில் நடக்கும்
இங்கு வலிகளும் இனித்திடுமே
புத்தியினை குழப்பும் ஆனால் மனதுக்கு பிடிக்கும்
அது மறுபடி குழப்பிடுமே
காதல் அது பொல்லாதது கொல்லாமலே கொல்லும் அது
கூச்சம் நாச்சம் இல்லாதது ஐய்யோ ஐய்யோ

மழையுதிர் காலம் மழையுதிர் காலம் நெஞ்சில் தெரிகிறதே
மனசுக்குள் ஏதோ மனசுக்குள் ஏதோ மின்னல் அடிக்கிறதே

சின்னதொரு புன்னகை என்னை என்ன பண்ணுது
எனக்கே புரியவில்லை
புயல் வந்த படகென புலன்களும் துடிக்குது
கரையேற தெரியவில்லை
கண்ணில் ஒரு கனவு விடிந்தால் அது கனிந்திடும் தெரியுது
ஆனால் மனம் நம்பிவிட மறுக்கிறது
ரெண்டும்கெட்ட வயசு மெதுவாய் ஒரு தூண்டிலை போடுது
மனசும் அதில் மாட்டிக்கிட்டு முழிக்கிறது
பெண்ணே நாளை என்ன நடக்கும்
உன்னை என்னை காலம் இணைக்கும்
பெண்ணே நாளை என்ன நடக்கும்
உன்னை என்னை

மழையுதிர் காலம் மழையுதிர் காலம் நெஞ்சில் தெரிகிறதே
மனசுக்குள் ஏதோ மனசுக்குள் ஏதோ மின்னல் அடிக்கிறதே
வார்த்தை சொல்ல துடிப்பதை உன் பார்வை சொல்கிறதே
மௌனம் போலவே ஒரு மொழிதான் ஏதடி

மழையுதிர் காலம் மழையுதிர் காலம் நெஞ்சில் தெரிகிறதே
மனசுக்குள் ஏதோ மனசுக்குள் ஏதோ மின்னல் அடிக்கிறதே

No comments: