Friday, January 27, 2012

இதுவரையில் நான் வாழ்ந்த வாழ்க்கை - சகாக்கள்

பாடல்: இதுவரையில் நான் வாழ்ந்த வாழ்க்கை
திரைப்படம்: சகாக்கள்
இசை: Sri.M.அழகப்பன் தயாரத்னம்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & K.S.சித்ரா

இதுவரையில் நான் வாழ்ந்த வாழ்க்கை காற்றில் போனதோ
ஒரு நொடியில் உன் வாசத்தோடு கூடி வந்ததோ
ஏனோ இங்கு நான் மாறினேன் என்னோடு தான் பேசினேன்
நீ இங்கு என் பாதியா தாலாட்டும் என் அன்னையா
பல கோடி கோடி இன்பம் தந்தவனே
விட்டுப்போகும் போது போகும் என்னுயிரே
இதுவரையில் நான் வாழ்ந்த வாழ்க்கை காற்றில் போனதோ
ஒரு நொடியில் உன் வாசத்தோடு கூடி வந்ததோ

நேற்றுவரைக்கும் காதல் என்பதை தவறென்று நினைத்தேனே
விழி வாசல்வரைக்கும் வந்த கனாவை நெஞ்சுக்குள் அடைத்தேனே
யாரென்று எதையும் பாராமல் என் தந்தையின் உயிர் காத்தாய்
இன்று எனக்கும்கூட தெரியாமல் வந்து இதயத்தில் கறை எடுத்தாய்
பல எண்ணத்தடைகளை தாண்டி நான் உன்னுள் முடிகிற வானம்
பல எண்ணத்தடைகளை தாண்டி நான் உன்னுள் முடிகிற வானம்
நீ இல்லாமல் செல்லாது வாழும் மணித்துளி ஒவ்வொன்றும்

பல கோடி கோடி இன்பம் தந்தவனே
விட்டுப்போகும் போது போகும் என்னுயிரே

இதுவரையில் நான் வாழ்ந்த வாழ்க்கை காற்றில் போனதோ
ஒரு நொடியில் உன் வாசத்தோடு கூடி வந்ததோ

நண்பர்கள் பேசும் காதலைக்கூட வேடிக்கையாய் நினைத்தேன்
இன்று உன்விழி ஜாடையின் அர்த்தங்கள் தேடி உலகத்தை மறந்துவிட்டேன்
சாலைக்கும் தெருவுக்கும் வீசிய காற்றை மூங்கிலுக்குள் அடைத்தாய்
உன் சடுகுடு பேச்சை கேட்பதற்காக மறுபடி பிறக்க வைத்தாய்
விளையாடித்திரிந்தவன் என்னை களவாடிப்போனவள் நீயா
விளையாடித்திரிந்தவன் என்னை களவாடிப்போனவள் நீயா
அட எப்போது என் வீடு வருவாய் என்பதை சொல்வாயா

பல கோடி கோடி இன்பம் தந்தவளே
விட்டுப்போகும் போது போகும் என்னுயிரே

இதுவரையில் நான் வாழ்ந்த வாழ்க்கை காற்றில் போனதோ
ஒரு நொடியில் உன் வாசத்தோடு கூடி வந்ததோ
 

No comments: