பாடல்: மலர்ந்தது ரோஜா
திரைப்படம்: விஷக்கன்னி
இசை: விஜய கிருஷ்ணமூர்த்தி
பாடியவர்: வாணி ஜெயராம்
மலர்ந்தது ரோஜா தெரியுமா ராஜா
மலர்ந்தது ரோஜா தெரியுமா ராஜா
மங்கை பருவம் மயக்கும் மயங்கும்
முதல் பார்வையிலே உடல் மறக்கும்
உயிர் மறக்கும் இருவருக்கும் சுகம் பிறக்கும்
மலர்ந்தது ரோஜா தெரியுமா ராஜா
ரதிதேவன் காமன் நீதானே
ரசனையுள்ள ரசிகன் நீயே என் ஜோடி
நீ மன்மத லீலையின் பொருள் கூற வா
இங்கு ரதிதேவன் காமன் நீதானே
ரசனையுள்ள ரசிகன் நீயே என் ஜோடி
நீ மன்மத லீலையின்
பொருள் கூற வா
இனி நாளொரு ஜாடைகளே
நித்யானந்த சேவைகளே
இந்த இளமையின் ரூபம்
நான் தரும் சொர்க்கம்
வருவாயடா வடுவாயடா
மலர்ந்தது ரோஜா தெரியுமா ராஜா
உனக்காக ஒரு உள்ளம் மலர்ந்து
எண்ணமும் வளர்ந்து ஆசை மிகுந்து
மெய் மறந்து நீ தருவதைப் பெற
இங்கு தவம் செய்யுது
மனதில் இன்பத்தேன் துளிகள்
மலையில் பனி நீர் மணிகள்
நீ தொடுகின்ற நேரம்
சுடுகின்ற தேகம்
குளிர்கின்றதே குளிர்கின்றதே
மலர்ந்தது ரோஜா தெரியுமா ராஜா
மங்கை பருவம் மயக்கும் மயங்கும்
முதல் பார்வையிலே உடல் மறக்கும்
உயிர் மறக்கும் இருவருக்கும் சுகம் பிறக்கும்
No comments:
Post a Comment