Friday, January 27, 2012

எனது நெஞ்சிலே இருப்பதென்னவோ - நாங்க

பாடல்: எனது நெஞ்சிலே இருப்பதென்னவோ
திரைப்படம்: நாங்க
இசை: பால பாரதி
பாடியவர்கள்: ஹரிசரண் & ஷைலஜா சுப்ரமணியன்

எனது நெஞ்சிலே இருப்பதென்னவோ
எனக்கு சொல்லவே வா
எனது கண்ணிலே எழுதியுள்ளதே
படித்து பார்க்கவே வா
தூங்காமல் கிடந்தேன் இரவெல்லாம் நடந்தேன்
பொல்லாத காதல் மன நோயால்
நான் கூட இங்கே முன் போல இல்லை
நான் கொண்ட காதல் என்னை வதைக்குதே

எனது நெஞ்சிலே இருப்பதென்னவோ
எனக்கு சொல்லவே வா

சினிமாவில் கண்ட காதல் நிஜமா இங்கு மாறாதா
உன்னோடு எந்தன் கைகள் ஒன்றாகாதா
நேராக சென்ற என்னை உன்னைச்சுற்ற வைத்தாயே
எனைவிட்டு வேறு எங்கும் நீ செல்வாயா
நிலம்போல உனை ஏந்தி நானும் தினம் வாழ்வேனே
வான்போல நிறம் தந்து நானும் உன்னில் வாழ்வேனே
ஆசைகள் தீருமா உயிர் சேரும் நாள் வருமா

உனது நெஞ்சிலே இருப்பதென்னவோ
உனக்கு சொல்லுவேன் நான்

விழியோரம் ஈரம் வந்து ரகசியமாக கசிகிறதே
நம் காதல் அழியாதென்று நீ சொல்வாயா
உன் மூச்சுக்காற்றில் நானும் சுவாசம் வாங்கி வாழ்கின்றேன்
நீ இல்லை என்றால் இங்கே நான் வாழ்வேனா
விடிந்தாலும் விடியாத இரவைப்போல நம் காதல்
புரிந்தாலும் பிரியாமல் மூளைக்குள்ளே ஒரு மோதல்
உள்ளங்கை ரேகைபோல் என் வாழ்க்கை உன்னிடமே

எனது நெஞ்சிலே இருப்பதென்னவோ
எனக்கு சொல்லவே வா
எனது கண்ணிலே எழுதியுள்ளதே
படித்து பார்க்கவே வா
தூங்காமல் கிடந்தேன் இரவெல்லாம் நடந்தேன்
பொல்லாத காதல் மன நோயால்
நான் கூட இங்கே முன் போல இல்லை
நான் கொண்ட காதல் என்னை வதைக்குதே

எனது நெஞ்சிலே இருப்பதென்னவோ
எனக்கு சொல்லவே வா

No comments: