Friday, January 27, 2012

தென்றலே தென்றலே - இளமை

பாடல்: தென்றலே தென்றலே தேடினேன் வா
திரைப்படம்: இளமை
இசை: கங்கை அமரன்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், எஸ்.என்.சுரேந்தர்,
எஸ்.பி.ஷைலஜா & பி.எஸ்.சசிரேகா?

தென்றலே தென்றலே தேடினேன் வா
வாலிபம் வந்ததும் வாடினேன் வா
தென்றலே தென்றலே தேடினேன் வா
வாலிபம் வந்ததும் வாடினேன் வா
உன் கண்ணுக்குள் ஏன் இந்த வெப்பங்கள்
என் நெஞ்சுக்குள் பூ அள்ளி கொட்டுங்கள்
தென்றலே தென்றலே தேடினேன் வா
வாலிபம் வந்ததும் வாடினேன் வா

ஏனோ பருவம் வந்தது
உனை யார் பழக சொன்னது
ஆஹா பறவை வந்தது
மரமா கடிதம் போட்டது
பெண்மை வயசு வந்தது
துணை யார் வருகவென்றது
ஆஹா நதியும் வந்தது
கடலா கண் அடித்தது
உனையே நினைத்தேன்
உயிரை வெறுத்தேன்
நதியாய் இளைத்தேன்
நகமும் கருத்தேன்
நதியே உனக்கும்
நடுக்கம் ஏனோ

தென்றலே தென்றலே தேடினேன் வா
வாலிபம் வந்ததும் வாடினேன் வா
உன் கண்ணுக்குள் ஏன் இந்த வெப்பங்கள்
என் நெஞ்சுக்குள் பூ அள்ளி கொட்டுங்கள்
தென்றலே தென்றலே தேடினேன் வா
வாலிபம் வந்ததும் வாடினேன் வா

ஆஹா புதிய வெள்ளமே
வா வா அன்புடைக்க வா
நீயோ அழகு ராஜ்ஜியம்
நாளும் படையெடுக்க வா
வா வா காமன் தந்தியே
நீயும் கனி கிடக்கு வா
ஆசை மனது போலவே
நானும் மடை திறக்கவா
இளமை மயக்கம்
இதமாய் இருக்கும்
இருக்கும் வரைக்கும்
இதயம் சுரக்கும்
உயிரை கசக்கும்
நெருக்கம் இன்பம்

தென்றலே தென்றலே தேடினேன் வா
வாலிபம் வந்ததும் வாடினேன் வா
தென்றலே தென்றலே தேடினேன் வா
வாலிபம் வந்ததும் வாடினேன் வா
உன் கண்ணுக்குள் ஏன் இந்த வெப்பங்கள்
என் நெஞ்சுக்குள் பூ அள்ளி கொட்டுங்கள்
தென்றலே தென்றலே தேடினேன் வா
வாலிபம் வந்ததும் வாடினேன் வா

No comments: