Monday, January 2, 2012

nee pourNami endRum en nenjilE - oruvar vaazhum aalayam

பாடல்: நீ பௌர்ணமி என்றும் என் நெஞ்சிலே
திரைப்படம்: ஒருவர் வாழும் ஆலயம்
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்

நீ பௌர்ணமி என்றும் என் நெஞ்சிலே
நீ பௌர்ணமி என்றும் என் நெஞ்சிலே
ராகம் என்னும் மேகம் உன்னை பாடி ஆடுதே
ராகம் என்னும் மேகம் உன்னை பாடி ஆடுதே
நீ பௌர்ணமி என்றும் என் நெஞ்சிலே
நீ பௌர்ணமி

விண்ணில் ஆடும் வானின் மீனே
ஆஆ ஆஆ...ஆஆஆ ஆஆ...ஆஆ ஆ
விண்ணில் ஆடும் வானின் மீனே
என்னை நீயும் வாட்டாதே
விண்ணில் ஆடும் வானின் மீனே
என்னை நீயும் வாட்டாதே
நீ இல்லாத வானம் இங்கே
மெய் இல்லாத ஜீவன் இங்கே
நீ இல்லாத வானம் இங்கே
மெய் இல்லாத ஜீவன் இங்கே
ராகம் என்னும் மேகம் உன்னை பாடி ஆடுதே

நீ பௌர்ணமி என்றும் என் நெஞ்சிலே
நீ பௌர்ணமி

வெள்ளி நதியில் ஆடும் போது
காட்சி காண வந்த நீ
அள்ளி எடுத்து கூடும் போது
சாட்சியாக இல்லையா
எண்ணிரந்த காதல் நெஞ்சம்
கோடி கோடி பார்த்த நீ
கண்ணிறைந்து வாழ கொஞ்சம்
வாழ்த்து சொல்ல மறந்ததேன்

பா த ப ம ப த ப ம க ரி
ஸா ரி க ரி ஸ ரி க ம ப
என் இதயம் துடிக்குது தினமும்
உருகும் அவள் நினைவில்

பா த ப ம ப த நி ஸ ரி
ரீ க ரி ஸ நி ஸ க ரி ஸ
கண் இமையில் அவள் உருவம்
சொல் தமிழில் அவள் அமுதம்

ரீ ரீ ரி ரி ரீ ரீ ரி ரி ரீ ரீ ரி ரி
நி ரி க ரி நி ரி க ரி ரீ
தனிமையின் கொடுமையில் காதலில்
அன்றெனை வாட்டியதேன்

கா க க கா க க கா க க
ஸ ரி க ரி க ப ம க ரி
பிரிவெனும் சிறைதனில் சாதலில்
இன்றெனை வாட்டுவதேன்

ப த நி ஸ ரி க ரி ஸ நி ஸ
க ரி ஸ நி ஸ ரி ஸ நி த நி
ஸ நி த ப நி த ப ம த ப ம க

நீ பௌர்ணமி என்றும் என் நெஞ்சிலே
நீ பௌர்ணமி என்றும் என் நெஞ்சிலே
ராகம் என்னும் மேகம் உன்னை பாடி ஆடுதே
ராகம் என்னும் மேகம் உன்னை பாடி ஆடுதே
நீ பௌர்ணமி என்றும் என் நெஞ்சிலே
நீ பௌர்ணமி

No comments: