Tuesday, January 3, 2012

malargaLil aadum iLamai - kalyaaNa raaman

பாடல்: மலர்களில் ஆடும் இளமை
திரைப்படம்: கல்யாண ராமன்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.ஷைலஜா

மலர்களில் ஆடும் இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்

மலர்களில் ஆடும் இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே
பருவம் சுகமே பூங்காற்றே நீ பாடு
மலர்களில் ஆடும் இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்

பூமரத்தின் வாசம் வந்தால் ஏதேதோ ஆசை
நெஞ்சுக்குள் தானாடும்
பால் வடியும் பசுங்கிளிகள் பேசாமல் பேசும்
பொன்வண்ண தேரோடும்
சொர்க்கத்தின் பக்கத்தை இங்கும் நான் காண
என்றென்றும் உன்னோடும் நாளும் நானாட
வந்தேனே தோழி நீயம்மா

மலர்களில் ஆடும் இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்

நான் இன்று கேட்பதெல்லாம் கல்யாண ராகம்
எண்ணங்கள் போராடும்
நான் இன்று காண்பதெல்லாம் பொன்னான நேரம்
எங்கெங்கும் தேனோடும்
இன்பத்தின் வண்ணங்கள் என்னை சீராட்ட
பொன்வண்டின் ரீங்காரம் கொஞ்சம் தாலாட்ட
பெண்மானே நாளும் ஏனம்மா

மலர்களில் ஆடும் இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்
பருவம் சுகமே பூங்காற்றே நீ பாடு
மலர்களில் ஆடும் இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்

No comments: