Friday, January 27, 2012

வானும் மண்ணும் மறையாதோ - நான் சிவனாகிறேன்

பாடல்: வானும் மண்ணும் மறையாதோ
திரைப்படம்: நான் சிவனாகிறேன்
இசை: K.S.மனோஜ்
பாடியவர்கள்: பிரசன்னா & மனோஜ்

வானும் மண்ணும் மறையாதோ
நிலவும் நீயும் போதாதோ
வார்த்தை ஒன்றும் பேசாமல்
விரல்கள் பேசி செல்லாதோ

வானும் மண்ணும் மறையாதோ
நிலவும் நீயும் போதாதோ
வார்த்தை ஒன்றும் பேசாமல்
விரல்கள் பேசி செல்லாதோ

உணர்வு மழைகள் இங்கு பொழிகிறதே
உயிரும் ததும்பி வந்து சிரிக்கிறதே
உலகை ஆள என்னை அழைக்கிறதே
இறையாய் என்னை மாற்றியதாரோ

உணர்வு மழைகள் இங்கு பொழிகிறதே
உயிரும் ததும்பி வந்து சிரிக்கிறதே
உலகை ஆள என்னை அழைக்கிறதே
இறையாய் என்னை மாற்றியதாரோ

வானும் மண்ணும் மறையாதோ
நிலவும் நீயும் போதாதோ
வார்த்தை ஒன்றும் பேசாமல்
விரல்கள் பேசி செல்லாதோ

இரவான பிறகும் கூட
வான வில்லும் தெரிகிறதே
வண்ணங்கள் கலையும் போதே வரியே
கரை வந்த பிறகும் கூட
அலைகள் என்னை தொடர்கிறதே
உன் பின்னால் எந்தன் கால்கள் வருதே
தவிக்கிறதே கண்ணும் சிவக்கிறதே
இது ஒரு மயக்கமும் தருகிறதே
துடிக்கிறதே நெஞ்சும் துடிக்கிறதே
இது ஒரு புது வழி தருகிறதே

என் நெஞ்சம் வாழாதோ
நீ இல்லா போது
என் பாவம் தீராதோ
நீ பார்க்கும் போது
வரமாக என் வாழ்வில்
நீ இங்கு வந்தாயடி

கல்லான எனக்கும் கூட
ஈரம் ஒன்று இருக்கிறதே
இதயங்கள் வளரும் போது சுடுதே
இறையான பிறகும் கூட
காதல் ஒன்று வளர்கிறதே
மண்ணான உணர்வுகள் கூட வருதே
எரிகிறதே உயிர் கரைகிறதே
இது ஒரு புது சுகம் தருகிறதே
நனைகிறதே உடல் சுடுகிறதே
இது ஒரு புது ரணம் தருகிறதே

என் மௌனம் கலையாதோ
நீ பேசும் போது
என் வாழ்வே மாறாதோ
நீ வாழும் போது
வரமாக என் வாழ்வில்
நீ இங்கு வந்தாயடி

வானும் மண்ணும் மறையாதோ மறையாதோ
நிலவும் நீயும் போதாதோ போதாதோ
வார்த்தை ஒன்றும் பேசாமல்
விரல்கள் பேசி செல்லாதோ செல்லாதோ

வானும் மண்ணும் மறையாதோ
நிலவும் நீயும் போதாதோ
வார்த்தை ஒன்றும் பேசாமல்
விரல்கள் பேசி செல்லாதோ

உணர்வு மழைகள் இங்கு பொழிகிறதே
உயிரும் ததும்பி வந்து சிரிக்கிறதே
உலகை ஆள என்னை அழைக்கிறதே
இறையாய் என்னை மாற்றியதாரோ

உணர்வு மழைகள் இங்கு பொழிகிறதே
உயிரும் ததும்பி வந்து சிரிக்கிறதே
உலகை ஆள என்னை அழைக்கிறதே
இறையாய் என்னை மாற்றிய நீ யாரோ
 

No comments: