பாடல்: மாலை வானின் மேகங்களே
திரைப்படம்: புனித மலர்
இசை: ஷ்யாம்
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & எஸ்.ஜானகி
மாலை வானின் மேகங்களே
மோக ராகம் பாடுங்களே
மாலை வானின் மேகங்களே
மோக ராகம் பாடுங்களே
மதன் விடும் கணை அல்லவோ
முதன் முதல் தொடும் சுகம் அல்லவோ
மதன் விடும் கணை அல்லவோ
முதன் முதல் தொடும் சுகம் அல்லவோ
ஒடியும் இடையில் ஊஞ்சல் ஆடவோ
விடியும் வரையில் இன்பம் தேடவோ
இளமை எழுதும் இனிய கவிதையோ
பேரின்ப தேனோ
இளமை எழுதும் இனிய கவிதையோ
பேரின்ப தேனோ
மாலை வானின் மேகங்களே
மோக ராகம் பாடுங்களே
நீல நயன மேடையோ
நாயகன் மார்பில் சாயவோ
நீல நயன மேடையோ
நாயகன் மார்பில் சாயவோ
இதம் தரும் விதங்களிலே
மிதந்திடும் சுகங்களிலே நீ வா
நீராட்டவோ அள்ளி அணைக்கவோ
அன்பை விதைக்கவோ
நீராட்டவோ அள்ளி அணைக்கவோ
அன்பை விதைக்கவோ
புது வகை மதுவோ
அதை நான் இதழ்களில் தரவோ
புது வகை மதுவோ
அதை நான் இதழ்களில் தரவோ
மாலை வானின் மேகங்களே
மோக ராகம் பாடுங்களே
மாணிக்க வீணையை மீட்டவோ
மாங்கனி எழில் காட்டவோ
மாணிக்க வீணையை மீட்டவோ
மாங்கனி எழில் காட்டவோ
மலர்களின் மடியினிலே
மயங்கிய நிலையினிலே நீ வா
தாலாட்டவோ உன்னை ரசிக்கவோ
என்னை மறக்கவோ
தாலாட்டவோ உன்னை ரசிக்கவோ
என்னை மறக்கவோ
புது வகை மதுவோ
அதை நான் இதழ்களில் தரவோ
புது வகை மதுவோ
அதை நான் இதழ்களில் தரவோ
மாலை வானின் மேகங்களே
மோக ராகம் பாடுங்களே
மதன் விடும் கணை அல்லவோ
முதன் முதல் தொடும் சுகம் அல்லவோ
மதன் விடும் கணை அல்லவோ
முதன் முதல் தொடும் சுகம் அல்லவோ
ஒடியும் இடையில் ஊஞ்சல் ஆடவோ
விடியும் வரையில் இன்பம் தேடவோ
இளமை எழுதும் இனிய கவிதையோ
பேரின்ப தேனோ
இளமை எழுதும் இனிய கவிதையோ
பேரின்ப தேனோ
மாலை வானின் மேகங்களே
மோக ராகம் பாடுங்களே
இன்ப ராகம் கொஞ்சம் வேணும்
இன்ப ராகம் கொஞ்சம் வேணும்
இன்ப ராகம் கொஞ்சம் வேணும்
No comments:
Post a Comment