Monday, January 16, 2012

எந்தன் கைக்குட்டையை - இசை பாடும் தென்றல்

பாடல்: எந்தன் கைக்குட்டையை
திரைப்படம்: இசை பாடும் தென்றல்
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா

எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது
அன்பு காதலின் சின்னமாய் எந்தன் காதலி தந்தது
எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது
எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது
அன்பு காதலின் சின்னமாய் எந்தன் காதலி தந்தது
எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது
நீயா...நீயா...நீயா...நீயா

சின்ன சின்ன நூல்களில் பூக்கள் வரைந்தேன்
ஆஹா என்னை வைத்து நான் அதில் பின்னி இருந்தேன்
கைக்குட்டையில் சின்னம் ஒன்று கண்டுபிடித்தேன்
பின்னி வைத்த பூவுக்கு முத்தம் கொடுத்தேன்
காதல் இதயம் தந்து முடித்தேன்
கண்ணின் இமையால் தந்தி அடித்தேன்
பின்னி முடித்த நூல்களுக்குள் நான் சிக்கித்தவித்தேன்
சிக்கித்தவித்தேன்...சிக்கல் எடுத்தேன்

எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது
அன்பு காதலின் சின்னமாய் எந்தன் காதலி தந்தது
அன்பு காதலின் சின்னமாய் எந்தன் காதலி தந்தது
எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது
நீயா...நீயா...நீயா...நீயா

கைக்குட்டையில் வேர்வையை துடைத்ததில்லை
அதற்கு வலித்திடும் என்று நான் மடித்ததில்லை
உந்தன் கையில் தந்தது துணியுமில்லை
என் இதயத்தை தான் தந்தேன் வழியுமில்லை
உன்னை நினைத்தால் உறக்கமில்லை
இன்பக்கிளியே இறக்கமில்லை
வாய்திறந்து என் பெண்மை சொல்வது வழக்கமில்லை
பழக்கமில்லை...விளக்கமில்லை

அந்த கைக்குட்டையை யார் எடுத்தது
அன்பு காதலின் சின்னமாய் இந்த காதலி தந்தது
அன்பு காதலின் சின்னமாய் இந்த காதலி தந்தது
அந்த கைக்குட்டையை யார் எடுத்தது
நான்தான்...நான்தான்...நான்தான்...நான்தான்

No comments: