Tuesday, January 3, 2012

oru paarvai paarthaalenna - punitha malar

பாடல்: ஒரு பார்வை பார்த்தால் என்ன
திரைப்படம்: புனித மலர்
இசை: ஷ்யாம்
பாடியவர்: ஜாலி ஆபிரகாம்

ஒரு பார்வை பார்த்தால் என்ன
உனக்கின்னும் கோபம் என்ன
கலை வண்ணம் கண்ணில் கொண்டாய்
சிலை என்று நீயே நின்றாய்
இளமையை முழுதும் எழுதிய அழகே
ஒரு பார்வை பார்த்தால் என்ன
உனக்கின்னும் கோபம் என்ன

ரவிவர்மன் இன்று இல்லை
அவன் நாளில் நீயும் இல்லை
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆ ஆ

ரவிவர்மன் இன்று இல்லை
அவன் நாளில் நீயும் இல்லை
காணும் உன்னழகை எழுதிட எவன் வருவான்
காதல் உள்ளமதை எனையன்றி எவன் தருவான்
காணும் உன்னழகை எழுதிட எவன் வருவான்
காதல் உள்ளமதை எனையன்றி எவன் தருவான்
இரவில் மலரும் தாமரை மலரே

ஒரு பார்வை பார்த்தால் என்ன
உனக்கின்னும் கோபம் என்ன

மகரந்த தாது கொண்டு
இளம் பாவை வேகம் இன்று

மகரந்த தாது கொண்டு
இளம் பாவை வேகம் இன்று
காமன் செய்த எழில் திரையினில் மறைகிறதே
காற்றும் என் உடலை நெருப்பென சுடுகிறதே
காமன் செய்த எழில் திரையினில் மறைகிறதே
காற்றும் என் உடலை நெருப்பென சுடுகிறதே
ரசிகன் கவிஞன் துடிப்பது சரியோ

ஒரு பார்வை பார்த்தால் என்ன
உனக்கின்னும் கோபம் என்ன
கலை வண்ணம் கண்ணில் கொண்டாய்
சிலை என்று நீயே நின்றாய்
இளமையை முழுதும் எழுதிய அழகே

ஒரு பார்வை பார்த்தால் என்ன
உனக்கின்னும் கோபம் என்ன
 

No comments: