Thursday, September 20, 2012

வான்முகிலே பூங்குயிலே - வாழ்வு மலர்ந்தது

பாடல்: வான்முகிலே பூங்குயிலே
திரைப்படம்: வாழ்வு மலர்ந்தது
இசை: ஜி.தேவராஜன்
பாடியவர்: பி.மாதுரி

வான்முகிலே பூங்குயிலே
என் மனதை அவனிடம் சொன்னதுண்டா
காற்றே நதியே தும்பிகளே
என் கனவை அவனிடம் சொன்னதுண்டா

வான்முகிலே பூங்குயிலே
என் மனதை அவனிடம் சொன்னதுண்டா
காற்றே நதியே தும்பிகளே
என் கனவை அவனிடம் சொன்னதுண்டா
வான்முகிலே

மனத்தில் பாடினேன் ஒரு பாடல்
அதில் மகிழ்ந்தாயோ என் மன்னவா
மனத்தில் பாடினேன் ஒரு பாடல்
அதில் மகிழ்ந்தாயோ என் மன்னவா
மௌனத்தில் எழுதினேன் ஒரு கடிதம்
அதை மறந்தாயோ என் மன்னவா
மன்னவா மன்னவா மன்னவா

வான்முகிலே பூங்குயிலே
என் மனதை அவனிடம் சொன்னதுண்டா
காற்றே நதியே தும்பிகளே
என் கனவை அவனிடம் சொன்னதுண்டா
வான்முகிலே

எனக்கு தனியாய் வாழ்வுண்டோ
என் இதயக்கோயில் உனதன்றோ
எனக்கு தனியாய் வாழ்வுண்டோ
என் இதயக்கோயில் உனதன்றோ
மனக்கண் முன்னே நிற்பவனே
உடன் வருவாயோ என் மன்னவா
மன்னவா மன்னவா மன்னவா

வான்முகிலே பூங்குயிலே
என் மனதை அவனிடம் சொன்னதுண்டா
காற்றே நதியே தும்பிகளே
என் கனவை அவனிடம் சொன்னதுண்டா

No comments: