Thursday, September 20, 2012

எத்தனை முத்துக்கள் - வாழ்வு மலர்ந்தது

பாடல்: எத்தனை முத்துக்கள்
திரைப்படம்: வாழ்வு மலர்ந்தது
இசை: ஜி.தேவராஜன்
பாடியவர்: ஜெயசந்திரன்

எத்தனை முத்துக்கள் அவள் சிந்திய புன்னகையில்
எத்தனை முத்தங்கள் அவள் தேன்தரும் செவ்விதழில்
எத்தனை முத்துக்கள் அவள் சிந்திய புன்னகையில்
எத்தனை முத்தங்கள் அவள் தேன்தரும் செவ்விதழில்

காம தேவன் எழுதிய கவிதை
என் கண்ணில் தோன்றும் அழகிய வனிதை
காம தேவன் எழுதிய கவிதை
என் கண்ணில் தோன்றும் அழகிய வனிதை
நெஞ்சணையோ மலர் பஞ்சணையோ
அதில் நித்தம் வரும் சுகம் எத்தனையோ
மல்லிகை பந்துகள் துள்ளி அசைந்திட
மெல்ல நடந்து வந்தாள்
மங்கையின் பொன்னுடல் அள்ளி அணைத்திட
என்னை அழைக்க வந்தாள்

எத்தனை முத்துக்கள் அவள் சிந்திய புன்னகையில்
எத்தனை முத்தங்கள் அவள் தேன்தரும் செவ்விதழில்

தேவன் கோவில் கலசங்கள் இரண்டு
அதில் தேனும் பாலும் இடையினில் சுமந்து
தேவன் கோவில் கலசங்கள் இரண்டு
அதில் தேனும் பாலும் இடையினில் சுமந்து
ஆடுகிறாள் இந்த மேடையிலே
எனைத் தேடுகிறாள் விழி ஜாடையிலே
எட்டிப்பிடிக்கவும் கொட்டிக்கொடுக்கவும்
என் மனம் ஏங்குதடி
கத்தைக் கரும்புடல் மெத்தை விரித்திட
தாமதம் எதுக்கடி

எத்தனை முத்துக்கள் அவள் சிந்திய புன்னகையில்
எத்தனை முத்தங்கள் அவள் தேன்தரும் செவ்விதழில்
எத்தனை முத்துக்கள் அவள் சிந்திய புன்னகையில்
எத்தனை முத்தங்கள் அவள் தேன்தரும் செவ்விதழில்

No comments: