Saturday, September 29, 2012

வைகை கரை காற்றே - உயிருள்ளவரை உஷா

பாடல்: வைகை கரை காற்றே நில்லு
திரைப்படம்: உயிருள்ளவரை உஷா
இசை: டி.ராஜேந்தர்
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்

வைகைக்கரை காத்தே நில்லு
வஞ்சி தனைப் பாத்தா சொல்லு
வைகைக்கரை காத்தே நில்லு
வஞ்சி தனைப் பாத்தா சொல்லு

மன்னன் மனம் வாடுதென்று
மங்கை தனைத் தேடுதென்று
காத்தே...பூங்காத்தே
என் கண்மணி அவளைக் கண்டால்
நீயும் காதோரம் போய் சொல்லு

வைகைக்கரை காத்தே நில்லு
வஞ்சி தனைப் பாத்தா சொல்லு
வைகைக்கரை காத்தே நில்லு
வஞ்சி தனைப் பாத்தா சொல்லு

மன்னன் மனம் வாடுதென்று
மங்கைதனைத் தேடுதென்று
காத்தே...பூங்காத்தே
என் கண்மணி அவளைக் கண்டால்
நீயும் காதோரம் போய் சொல்லு

திருக்கோவில் வாசலது திறக்கவில்லை
தெருக்கோடி பூஜையது நடக்கவில்லை
தேவதையைக் காண்பதற்கு வழியுமில்லை
தேன்மொழியைக் கேட்பதற்கு வகையுமில்லை
காதலில் வாழ்ந்த கன்னி மனம்
காவலில் வாடையில் கண்ணி விடும்
கூண்டுக்குள்ளே அலை மோதும்
காதல் கிளி அவள் பாவம்
கூண்டுக்குள்ளே அலை மோதும்
காதல் கிளி அவள் பாவம்
காதல் கிளி அவள் பாவம்

காத்தே...பூங்காத்தே
என் கண்மணி அவளைக் கண்டால்
நீயும் காதோரம் போய் சொல்லு

மாக்கோலம் போடுதற்கு வரவில்லையே
அவள் கோலம் பார்ப்பதற்கு வழியில்லையே
ஜன்னலுக்குள் நிலவு அவள் தோன்றவில்லையே
ஜாடையொளி சிந்த அவள் இன்று இல்லையே
நிலவினை மேகம் வானில் மறைக்க
அவளினை யாரோ வீட்டில் தடுக்க
மேகம் அது விலகாதோ
சோகம் அது நீங்காதோ
மேகம் அது விலகாதோ
சோகம் அது நீங்காதோ
சோகம் அது நீங்காதோ

காத்தே...பூங்காத்தே
என் கண்மணி அவளைக் கண்டால்
நீயும் காதோரம் போய் சொல்லு

வைகைக்கரை காத்தே நில்லு
வஞ்சி தனைப் பாத்தா சொல்லு
வைகை கரை காத்தே நில்லு
வஞ்சி தனைப் பாத்தா சொல்லு

மன்னன் மனம் வாடுதென்று
மங்கை தனைத் தேடுதென்று
காத்தே...பூங்காத்தே
என் கண்மணி அவளைக் கண்டால்
நீயும் காதோரம் போய் சொல்லு
நீ காதோரம் போய் சொல்லு
நீ காதோரம் போய் சொல்லு

No comments: