Saturday, September 22, 2012

அழகு சித்திரம் இளமை புத்தகம் - மருமகளே வாழ்க

பாடல்: அழகு சித்திரம் இளமை புத்தகம்
திரைப்படம்: மருமகளே வாழ்க
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்: ஆண் குரல்? & எஸ்.பி.ஷைலஜா

அழகு சித்திரம் இளமை புத்தகம்
அழைக்குதய்யா மயக்குதய்யா
கண்ணாலே ரெண்டு கண்ணாலே
இளம் பூங்காற்றும் நான் எழில் நீரூற்றும் நான்
என் அங்கம் உன் கையில் மிருதங்கமே

அழகு சித்திரம் இளமை புத்தகம்
அழைக்குதய்யா மயக்குதய்யா
கண்ணாலே ரெண்டு கண்ணாலே
இளம் பூங்காற்றும் நான் எழில் நீரூற்றும் நான்
என் அங்கம் உன் கையில் மிருதங்கமே


ஸஸ ஸ கக ரிரி ஸ நிநி நி ஸ ஸ ஸா
கக க பப மம க ரிரி ரி கக க
பநி...ஸா மப...நி பநி...ஸா மப...நி
பா பா பா பா பம கரி சநி தப
ஸநி ஸஸ ஸநி ஸஸ ஸநி ஸஸ ஸநி ஸஸ
பம கரி கரி கரி கரி ஸநி ஸநி ஸரி ஸக
ரிக ரிக ரிக ரிக ரிம கம கம
பம கரி ஸநி தப ஸப
பம கரி ஸநி தப...ஸா

வைகை...தோளில் வை கை
காதல் பொய்கை என்னோடு நின்றாடு
வைகை தோளில் வை கை
காதல் பொய்கை என்னோடு நின்றாடு

கலைஞன் கண்டாலே சிலையும் பெண்ணாகும்
அணைத்துக் கொண்டாலே அமைதி உண்டாகும்

மதுக்கடலென புது சுவைதரும் உனது பொன்னேடு
புதுக்கவிதைகள் தினம் இதழ்களில் எழுதிக் கொண்டாடு


அழகு சித்திரம் இளமை புத்தகம்
அழைக்குதய்யா மயக்குதய்யா
கண்ணாலே ரெண்டு கண்ணாலே
இளம் பூங்காற்றும் நான் எழில் நீரூற்றும் நான்
என் அங்கம் உன் கையில் மிருதங்கமே


மோகம்...காதல் ராகம்
இந்த நேரம் எந்நாளும் உண்டாகும்
ஆஹா ஹா மோகம் காதல் ராகம்
இந்த நேரம் எந்நாளும் உண்டாகும்

இனிக்கும் பாலாடை குளிக்கும் நீரோடை
மணக்கும் பூவாடை அழைக்கும் அத்தானை

கடல் தழுவிடும் நதியென மெல்ல தழுவக்கூடாதோ
மழைமுகிலென தினம் சுகமழை பொழியக்கூடாதோ


அழகு சித்திரம் இளமை புத்தகம்
அழைக்குதய்யா மயக்குதய்யா
கண்ணாலே ரெண்டு கண்ணாலே
இளம் பூங்காற்றும் நான் எழில் நீரூற்றும் நான்
என் அங்கம் உன் கையில் மிருதங்கமே
 

No comments: