Saturday, September 22, 2012

ஆசையுள்ள ரோஜாசெண்டு - சித்திரமே சித்திரமே

பாடல்: ஆசையுள்ள ரோஜாசெண்டு
திரைப்படம்: சித்திரமே சித்திரமே
இசை: சிவாஜி ராஜா
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & வாணி ஜெயராம்

ஆசையுள்ள ரோஜாசெண்டு அதில் தேனெடுக்கும் காதல்வண்டு
ஆசையுள்ள ரோஜாசெண்டு அதில் தேனெடுக்கும் காதல்வண்டு
தங்கத்து ரத்தினமே நெஞ்சுக்குள் தங்கிய சித்திரமே
தங்கத்து ரத்தினமே நெஞ்சுக்குள் தங்கிய சித்திரமே

ஆ...ஆஆ நாள்தோறும் பாலூறும் தோள்சேறும் நேரமே
காதலன் நெஞ்சப்படி மலர்ந்தாள் காவிய வஞ்சிக்கொடி
காதலன் நெஞ்சப்படி மலர்ந்தாள் காவிய வஞ்சிக்கொடி

ஆசையுள்ள ரோஜாசெண்டு அதில் தேனெடுக்கும் காதல்வண்டு

காதல் கனிந்தால் வாழ்க்கை முல்லை மஞ்சமடி
உந்தன் பாதம் எனக்கு என்றும் தஞ்சமடி
காதல் கனிந்தால் வாழ்க்கை முல்லை மஞ்சமடி
உந்தன் பாதம் எனக்கு என்றும் தஞ்சமடி

இரு தோளுக்கு நாளைக்கு மாலைக்கு சொல்லிவிடு
மல்லிகைப்பூ விரித்து கிடப்போம் மன்மத தேன்குடித்து
மல்லிகைப்பூ விரித்து கிடப்போம் மன்மத தேன்குடித்து

ஆசையுள்ள ரோஜாசெண்டு அதில் தேனெடுக்கும் காதல்வண்டு

நிஜமான காதல் உணர்வோடு சேரும்
உணர்வோடு சேர்ந்து உயிராக மாறும்


அட சந்தன பந்துகள் மன்மத சிந்துகள் கொஞ்சிட துள்ளாதோ
அட சந்தன பந்துகள் மன்மத சிந்துகள் கொஞ்சிட துள்ளாதோ

ஆஹா பாலைவனத்தில் மஜ்னு பட்டது கொஞ்சமல்ல
ஈரம் இருந்தும் மறைத்து வாழ்வது நெஞ்சமல்ல
ஆஹா பாலைவனத்தில் மஜ்னு பட்டது கொஞ்சமல்ல
ஈரம் இருந்தும் மறைத்து வாழ்வது நெஞ்சமல்ல

அட நெஞ்சுக்குள் போரிட்டு வாழ்வது வாழ்க்கையல்ல

காற்றில் அணைந்துவிட காதல் கற்பூர தீபமல்ல
காற்றில் அணைந்துவிட காதல் கற்பூர தீபமல்ல
ஆசையுள்ள ரோஜாசெண்டு அதில் தேனெடுக்கும் காதல்வண்டு
தங்கத்து ரத்தினமே நெஞ்சுக்குள் தங்கிய சித்திரமே
தங்கத்து ரத்தினமே நெஞ்சுக்குள் தங்கிய சித்திரமே

No comments: