Saturday, September 22, 2012

பூவே உன்னை கட்டிக்கொண்டு - அவன்

பாடல்: பூவே உன்னை கட்டிக்கொண்டு
திரைப்படம்: அவன்
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & உமா ரமணன்

பூவே உன்னை கட்டிக்கொண்டு பூஜை செய்யட்டா
நேரம் நல்ல நேரம் என்று மேளம் கொட்டட்டா
ஓடும் நதி ரெண்டும் ஒன்றானது இன்று
நாம் போகின்ற பாதைகள் சோலை ஆனது

ஓடும் நதி ரெண்டும் ஒன்றானது இன்று
நாம் போகின்ற பாதைகள் சோலை ஆனது
பூவே உன்னை கட்டிக்கொண்டு பூஜை செய்யட்டா
நேரம் நல்ல நேரம் என்று மேளம் கொட்டட்டா


உன்னைக்கண்ட பின்னே என்னைக்காணோம் கண்ணா
எனை கண்டுகொள்ள வந்தேன் உன் கண்ணில் இன்று கண்டேன்

நாளை தோன்றும் புல்லும் அன்பே நம் பேர் சொல்லும்
அட வானும் மண்ணும் மாறும் நம் காதல் நின்று வாழும்

மதனா நீயும் இல்லை என்றால் மண்ணில் நானும் இல்லை
மானே உந்தன் மூச்சில் தானே மண்ணில் நானும் வாழ்கிறேன்

பூவே உன்னை கட்டிக்கொண்டு பூஜை செய்யட்டா
நேரம் நல்ல நேரம் என்று மேளம் கொட்டட்டா

ஓடும் நதி ரெண்டும் ஒன்றானது இன்று
நாம் போகின்ற பாதைகள் சோலை ஆனது


கண்கள் காதல் சின்னம் கன்னம் ரோஜாக்கிண்ணம்
பசி தீர்ந்து போகும் வண்ணம் பரிமாற வேண்டும் இன்னும்

அள்ளித் தந்தேன் முத்தம் என்னில் ஏதோ சத்தம்
விழி மூடவில்லை நித்தம் இரவோடு என்ன யுத்தம்

கண்ணே நீயே தஞ்சம் என்று வந்தேன் இங்கே வா வா
ஜென்மம் மாறும் என்னும் போதும் சொந்தம் மாறாதல்லவா

பூவே உன்னை கட்டிக்கொண்டு பூஜை செய்யட்டா
நேரம் நல்ல நேரம் என்று மேளம் கொட்டட்டா

ஓடும் நதி ரெண்டும் ஒன்றானது இன்று
நாம் போகின்ற பாதைகள் சோலை ஆனது
 

No comments: